மதுராந்தகம், ஜன. 19- சிஐடியு, தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் தியாகி கள் தின கருத்தரங்கம் நடைபெற்றது. மதுராந்தகத்தில் வெள்ளியன்று ( ஜன.19) சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி. மாசிலாமணி தலைமை யில் நடைபெற்ற கருத்த ரங்கத்தில் முறைசாரா தொழி லாளர்களுக்கு தேசிய நிதி ஆணையத்தை உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச சம்பளம் ரூ 26 ஆயிரம் வழங்க வேண்டும், அனைவருக்கும் சமூக பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த ஊழியர் முறையை கைவிட வேண்டும், முதலா ளிகளுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர் நல சட்ட தொகுப்பை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலா ளர் க.பகத்சிங் தாஸ், மாவட்ட துணைச் செயலா ளர் இ.ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் எம்.கலை செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் ரமேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.அரி கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சண்முகம், மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினார் கருத்தரங்கத்தை நிறைவு செய்து சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் வி.குமார் பேசினார்.