districts

img

விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டுவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படி சந்திப்போம்

திருவள்ளூர், நவ.19- திருவள்ளூரில் ராஜம்மாள் தேவி பூங்கா வில் நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டுவதை நிறுத்தா விட்டால்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என எச்சரித்துள்ளது. திருவள்ளூர் நக ராட்சிக்கு சொந்தமான, மாவட்ட ஆட்சியர் அருகில் உள்ள ராஜம்மாள் தேவி பூங்கா நூறு ஆண்டுகள் பழமையானது. இந்த பூங்காவை சிறுவர்கள், மாணவர்கள் என உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர். இந்த நிலையில் பூங்காவை நகராட்சி நிர்வாகம் முழுமையாக கையகப்படுத்தி வணிக நோக்கத்தோடு கடைகளை கட்டி வருகிறது. தற்போது எழுப்பப்பட்டுள்ள கட்டு மானங்களை அகற்றி அதனை மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வலி யுறுத்தி சிபிஎம் சார்பில் செவ்வாயன்று (நவ 19) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்ற காவல்துறையினர், அனை வரையும் கைது செய்வோம் என்றது. விதிமுறைகளை மீறி செயல்படும் நகராட்சி நிர்வாகத்தின் மீது நட வடிக்கை எடுக்காமல், மக்க ளுக்காக போராடும் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்களை கைது செய்ய முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் தலை வர்களுக்கும், காவல்துறை யினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பூங்காவை அழகுபடுத்தி பாதுகாக்க வேண்டும், வணிக நோக்கத்தோடு நகராட்சி நிர்வாகம் செயல்படாமல், பூங்காவை மக்கள் பயன்  பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர். இதில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வும் தலைவர்கள் பேசினர். இதற்கு கட்சியின் வட்ட செயலாளர் எஸ்.கலை யரசன் தலைமை தாங்கி னார்.இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட குழு உறுப்பினர் இ.எழிலரசன், வட்ட குழு உறுப்பினர்கள் கே. முருகன்,  எம்.உதயநிலா, எஸ்.நல்லரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.