விழுப்புரம், டிச.15- மேல்மலையனூர் வட்டத்தை பெஞ்சல் புயல் பாதிப்பு வட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள 80 வரு வாய் கிராங்களையும், பெஞ்சல் புயலால் நீர் சூழ்ந்த பகுதியாக அறிவித்து அனைத்து குடும்பங்களுக்கும் அரசு அறி வித்துள்ள நிவாரணத்தை வழங்க வேண்டும், பாதிப்புக்குள்ளான அனைத்து பயிர்களை யும் கணக்கெடுத்து அனைத்து விவசாயி களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மறுபயிர் செய்வதற்கு எதுவாக உற்பத்திச் செலவை கணக்கில் எடுத்துக் கொண்டு நெல் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். புயல் மழை வெள்ளத்தால் இடிந்து போன விவசாய கிணறுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் வட்டச் செயலாளர் ஹரிஹர குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுபபிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.முருகன், வி.எழில் ராஜா, பி.இலக்கிய பாரதி, வட்டக்குழு உறுப்பினர்கள் பி. வெங்கிடபதி,கே.ரவி,சி.குமார், டி.சுரேஷ், என்..கார்த்திகேயன், ஆர்.சதீஸ்குமார்,ஏ.கர்லீனா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடி வில், வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை கள் அடங்கிய அடங்கிய மனுவை கொடுத்தனர்.