சோழவரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை அமைத்திடுக சிபிஎம் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்
திருவள்ளூர், அக். 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சோழவரம் ஒன்றிய 24 வது ஒன்றிய மாநாடு ஞாயி றன்று (அக் 20), சோழவரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் இ.ரவி, எம்.ரமணி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட குழு உறுப்பினர் பி.நடேசன் கொடியேற்றி வைத்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சித்ரா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஒன்றிய குழு உறுப்பி னர் சி.மனோகரன் வரவேற்றார். மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன் துவக்கவுரையாற்றினார்.ஒன்றிய செயலாளர் ஜி.எல்லையன் வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன் மாநாட்டை முடித்து வைத்து பேசினர். ஒனறிய குழு கே.கார்த்திக் நன்றி கூறினார். ஒன்றியக்குழு தேர்வு 9 பேர் கொண்ட சோழவரம் ஒன்றியக் குழுவின் செயலாளராக அ.து.கோதண்டன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் சோழவரத்தில் நவீன மேம்படுத்த அரசு மருத்துவ மனை அமைக்க வேண்டும், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம சாலைகளையும் சீரமைக்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க வேண்டும், பாடிய நல்லூரில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும், நூறு நாள் வேலை தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முறைசாரா சங்க மதுரவாயல் பகுதி பேரவை
சென்னை, அக்.20 - சென்னை மற்றும் புறநகர் முறை சாரா தொழிலாளர் சங்கம் மதுர வாயல் பகுதி ஆண்டு பேரவை கூட்டம் சனிக்கிழமையன்று காரம்பாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதித் தலைவர் எம்.நடராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வி.தாமோதரன் வரவேற்றார். தென்சென்னை மாவட்ட பொது செயலாளர் யு.அனில்குமார் துவக்க உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் வி.தாமஸ் வேலையறிக்கையும், பொருளாளர் ஆர்.துளசி வரவு,செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். வீட்டு வேலை தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் எஸ்.விஜயா, மாவட்ட நிர்வாகி ஆர்.குமார் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ஏ.லதா நிறைவுறையாற்றினார். பகுதி தலைவராக எஸ்.விஜயலட்சுமி, செயலாளராக ஆர்.பாலசுப்ரமணியம், பொருளாளராக எஸ்.அருளானந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சொத்துவரி ஊக்கத் தொகை
சென்னை, அக்.20- சென்னை மாநகராட்சியில் சொத்து வரி குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் சொத்து வரி செலுத்து வதில் பாக்கி வைக்காமல் இருந்தால் அவர்களுக்கு 5விழுக்காடு ஊக்கத் தொகை சலுகை வழங்கப்படுகிறது. இந்த மாதம் 30-ந்தேதிக்குள் வரியை செலுத்தி சலுகையை பெறும்படி மாநகராட்சி அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகிறது டானா புயல்!
சென்னை, அக்.20- வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் தெரி வித்துள்ள தகவலின்படி, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து அக்டோபர் 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ளது. பின்னர் புயல் உருவாகி, தமிழக கடற்கரை பகுதிகளை விட்டுவிலகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என மதிப்பிடப்பிட்டுள்ளது. இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த ‘டானா’ (DANA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்கக்கடல் பகுதிகளில் அக்.,21 (திங்கட்கிழமை) அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அக். 22 ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதி களில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ரேசன் கடைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் புதுச்சேரி அரசுக்கு மாதர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி, அக்.20- புதுச்சேரியில் ரேசன் கடைகள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி, துணைத் தலைவர் சத்தியா, துணைச் செயலாளர் உமா சாந்தி, நகரச் செயலாளர் ஜானகி ஆகியோர் தலைமை செயலகத்தில் அரசு செயலர் முத்தம்மாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கடந்த 7 ஆண்டு களாக மூடப்பட்ட ரேசன் கடை களை திறக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தொடர்ச்சி யாக போராட்டம் நடத்தியது. இதையடுத்து, தீபாவளியையொட்டி அனைத்து ரேசன் கடைகளையும் திறந்து 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்குவதாக முதல மைச்சர் அறிவித்துள்ளார். இது வெறும் பண்டிகை காலத்தோடு நிற்காமல் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி வேண்டும். உணவு தேவையை பூர்த்தி செய்யவேண்டும். அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட அரசு செயலர் முத்தம்மா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்துள்ளதாக மாதர் சங்கத் தலை வர்கள் தெரிவித்தனர்.