சிதம்பரம், ஆக 1-
கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூ ராட்சியில் பணியாற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 17 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் செவ்வாய் கிழமை (ஆக.1) புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக வேலைக்கு சேர்த்துக் கொள்ள வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சதானந்தம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இதையடுத்து, புவனகிரி வட்டாட்சி யர் சிவகுமார் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர்களை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் தற்போது என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சிவக்குமார், பேரூராட்சித் தலைவர் கந்தன், செயல் அலுவலர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, 17 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தருவதாக ஒப்புதல் கொடுத்தனர். பிறகு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையிட்டால் தான் மீண்டும் வேலை கிடைத்தது. தூய்மை பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.