சிதம்பரம், டிச.23- சிதம்பரம் அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆவேச சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிவடையாத நிலையில் கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் முதல் சீர்காழி அருகே சட்டநாதபுரம் வரை 55 கிமீ தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிந்த தாக அறிவித்து கொத்தட்டையில் அமைக்க ப்பட்டுள்ள டோல்கேட்டில் திங்கள்முதல் ( டிச.23) முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது. நெடுஞ்சாலைப் பணிகள் முழு வதும் முடிவடைந்த உடன் டோல்கேட்டை திறக்கவேண்டும், தனியார் பேருந்து களுக்கு அறிவித்துள்ள அதிக கட்ட ணத்தையும், லாரிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லாமல் பாஸ் வழங்கவேண்டும், அறி விக்கப்பட்ட கட்டணம் கூடுதலாக இருப்ப தால் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தி சிபிஎம் தலைமையில் சுங்கச் சாவடியை முற்றுகையிடுவது என அறி விக்கப்ட்டிருந்தது. இதுகுறித்து கொத்தட்டை டோல்கேட் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. பேச்சுவார்த்தையில் முடிவு எட்ட ப்படாத நிலையில் டிச 21-ந் தேதி சிபிஎம் தலைமையில் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், தனியார் பேருந்து, லாரி , வேன் உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம், பரங்கிப்பேட்டை வர்த்தகர்கள் சங்கம், முட்லூர் மற்றும் பெரியபட்டு வர்த்தகர்கள் சங்கம், முட்லூர் ஜமாத்தார்கள், சிலம்பி மங்களம் மற்றும் தீர்த்தாம்பாளையம் கிராம முக்கியஸ்தர்கள், 6 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொத்தட்டை டோல் கட்டணத்தை குறைக்க வேண்டும், 60 கி.மீ ஒரு டோல்கேட் என்பதை உறுதி செய்ய வேண்டும். முழுமையாக விழுப்புரம் முதல் நாகை வரை பணிகள் முடிந்தவுடன் வசூல் துவக்கப்பட வேண்டும். 20 கி.மீ உள்ளவர்களுக்கு மாதம் ரூ 340 என்பதை ரத்து செய்ய வேண்டும், அதே நேரத்தில் 50 கி.மீ உள்ளவர்களுக்கு மாதம் ரூ 340 பாஸ் என்பதை விஸ்தரிக்க வேண்டும். தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு விதித்து ள்ள மாதம் 90 ஆயிரம் அநியாய கட்ட னத்தை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு உறுப்பினர் மூசா, ஒன்றிய செயலாளர்கள் விஜய், ஆழ்வார், மாவட்ட குழு உறுப்பினர் அம்சயால், பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், விசிக மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி 10 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜமாத்துகள், மாதர் சங்கம், வர்த்தக சங்கம், விவசாயிகள் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வாகனம் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை மறியலைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி, தேசிய நெடுஞ் சாலை திட்ட இயக்குநர் சக்திவேல், போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் தனியார் பேருந்துகளுக்கு ரூ 14 ஆயிரம் கட்டணத்தில் மாதம் முழுவதும் பயணிப்பது என்றும், கிராமப்புறங்களில் ஒவ்வொரு கிராமங்களிலும் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்து தருவது, கிரா மங்களுக்கு சர்வீஸ் சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஒப்புதல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உள்ளூர் விவசாயிகள் உள்ளூர் மக்க ளுக்கு தேவையான உதவிகளை செய்வ தாகவும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. எச்சரிக்கை கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் பொதுமக்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் டோல்கேட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு எச்சரித்தார். முன்னதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து சிதம்பரம் - கடலூர் மார்க்கத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அனைத்தையும் வேலை நிறுத்தம் செய்து டோல்கேட் முன்பு வரிசையாக நிறுத்தி வைத்தனர்.