சென்னை, நவ. 6- தரமற்ற குடியிருப்புகள் கட்டும் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று ராயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிபிஎம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போஜராஜன் நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும், மூலக் கொத்தளம் திட்டப் பகுதியில் கட்டப் பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தரமாக கட்டப்பட்டுள்ளதா என்பதை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் மூலம் ஆய்வு செய்ய வேண்டும், 53ஆவது வட்டத்திற்குட்பட்ட பகுதி களில் 5 தலைமுறைகளை கடந்து வசிக்கும் மக்களுக்கு இலவச குடி மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் பகுதிக் குழு சார்பில் வள்ள லார்
நகர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு, வரு மானம் இல்லாத சூழலில், எப்படியா வது பிழைத்துக் கொள்ளலாம் என நகர்ப்புறத்தை நோக்கி வரும் மக்க ளுக்கு அடிப்படை வசதிகளின்றி ஒரு நகர வாழ்க்கை என்பதை விட நரக வாழ்க்கை வாழக்கூடிய நிலை உள்ளது. சாதாரண குப்பத்திலே வாழக்கூடிய மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கப் படுவதில்லை. முறையாக கழிவுநீர் வெளியேறுவதற்கான வசதிகள் இல்லை. சிறிய மழைக்கே சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து குடியிருப் புகளுக்குள் புகும் அவல நிலை உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வா கம் நினைத்தால் இந்த மக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, நல்ல தரமான வாழ்க்கை வாழ்வ தற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
இலவச குடிமனை பட்டா கேட்டு மனு அளிக்க ஏராளமான பெண்கள் திரண்டுள்ளனர். அவர்கள் இதுவரை எத்தனை மனுக்கள் அளித்திருப்பார் கள் என்று கணக்கிட்டு பார்க்க முடியாது. அவர்கள் அளிக்கும் மனுக்கள் முறை யாக பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. 13 ஆண்டுகள் தாமதம் ஏன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆரம்பித்து கடந்த சில ஆண்டுகளில் சென்னை நகரம் முழுவதும் விரைந்து பணிகள் நடைபெற்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் போஜராஜன் நகரில் அமைக்கப்படும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் மட்டும் கடந்த 13 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. ஒரு சுரங்கப்பாதை அமைக்க 13 ஆண்டுகள் தேவையா என கேள்வி எழுப்பிய அவர், சாதாரண மக்கள் வசிக்கும் பகுதியில் நடை பெறும் பணிகள் என்றாலே அதற்கு போதுமான கவனம் செலுத்துவ தில்லை என்று குற்றம் சாட்டினார். தரமற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் மூலக்கொத்தளம் பகுதியில் கட்டப் பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டி முடித்த 3 ஆண்டுகளுக்குள்ளேயே சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது, ஜன்னல் கீழே விழுகிறது, தரை தளத்தில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் ஊற்றெடுத்து வருகிறது என்றால் அங்கு வசிக்கும் மக்கள் தினசரி அச்சத்துடனே வாழ வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக வல்லுநர்களை கொண்டு குடியிருப்புகள் தரமாக கட்டப்பட்டுள் ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
தரமானது என்று தெரிய வந்தால் மக்களை குடியமர்த்த வேண்டும், இல்லையென்றால் அவர் களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். தரமற்ற குடியி ருப்புகள் கட்டும் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். அச்சத்துடன் வாழ்கிறோம் பின்னர் மூலக்கொத்தளத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை சென்று கே.பாலகிருஷ்ணன் பார்வை யிட்டார். அப்போது அங்கு குடியிருக் கும் மக்கள் கை வைத்தாலே சிமெண்ட் பூச்சுகள் விழுவதையும், தண்ணீர் தேங்கி நிற்பதையும் காண்பித்து அச்சத்துடனே வாழ்வதாக தெரிவித் தனர். அதற்கே கே.பாலகிருஷ்ணன் அமைச்சரை சந்தித்து பேசி நட வடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, பகுதிக் குழு உறுப்பி னர்கள் டி.வெங்கட், ச.முருகேசன், ஜி.முனுசாமி ஆகியோரும் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.
பறவைக்கும் பாம்புக்கும் இருக்கிற உரிமைகூட...
தற்போது நகர்ப்புறங்களில் வாழக்கூடிய மக்களுக்கு தமிழ்நாடு அரசு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்புக்குரியது.இருப்பினும் சென்னையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புறம் போக்கில் குடிசை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை உரிமையான வீடு கூட கிடையாது. ஒரு பறவைக்கும், பாம்புக்கும் இருக்கின்ற உரிமை கூட இந்த நாட்டிலே குடியுரிமை பெற்றிருக்கக் கூடியமனிதர்களுக்கு இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்கி 53ஆவது வட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமல்லாது சென்னை நகரத்திலே யார் யார் புறம்போக்கு நிலத்திலே குடியிருக்கிறார்களோ அதை அளவீடு செய்து அவர்களுக்கு உடனடியாக இலவச மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பாலகிருஷ்ணன்.