districts

img

புத்தகக் காட்சியில் 3 நூல்கள் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார்

சென்னை, ஜன. 9 - சென்னை புத்தகக்காட்சியில் புதனன்று (ஜன.8) 3 நூல்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார். எழுத்தாளர் ஓ.கே.ஜானி எழுதி, நெய்வேலி மு.சுப்பிரமணி மொழி பெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘காவேரியுடன் எனது பயணங்கள்’ வெளியீட்டு நிகழ்வு ஏசியன் ஊடகவியல் கல்லூரி தலைவர் சசிக்குமார் தலைமையில் நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பெற்றுக் கொண்டார். திருநர் ஆ.ரேவதி எழுதிய ‘அரங்கேறிய வெள்ளை மொழி’, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா எழுதிய ‘ஒளிரும் டங்ஸ்டன், இருளும் எதிர்கலம்’ ஆகிய நூலைகளை பெ.சண்முகம் வெளியிட, பத்திரிகையாளர் கவிதா முரளிதரனும், பேரா.வீ.அரசுவும் பெற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பேசிய பெ.சண்முகம், “அரங்கேறிய வெள்ளை மொழி நூல் உணர்ச்சிப்பூர்வமான, அனைவரையும் எழுத தூண்ட வைக்கும் நூல். மிகச்சிறந்த நூலுக்கான பல்வேறு கூறுகள் பலவும் உள்ளன. இந்நூலை பரவலாக கொண்டு செல்ல வேண்டும். இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும்” என்றார். “காவேரியை வேறு ஒருகோணத்தில் ‘காவிரியுடன் எனது பயணம்’ நூல் அணுகியுள்ளது. காவிரி பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பண்பாட்டு வியல் என்ற வகையில் நூல் அமைந்துள்ளது. நூலாசிரியர் ஜானி காவிரிக்குள் புகுந்து, விளையாடி, நீந்தி வந்துள்ளார். மிகச்சிறந்த முறையில் சுப்பிரமணி மொழியாக்கம் செய்துள்ளார். அதற்காக அவருக்கு விருது வழங்கப்பட வேண்டும்” என்றும் கூறினார். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென் சென்னை), எம்.ராமகிருஷ்ணன் (வடசென்னை), நாடகவி யலாளர் அ.மங்கை, பாரதி புத்தகாலயம் க.நாகராஜன், சிராஜூதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.