districts

img

குடியாத்தம்: பட்டா வழங்கக் கோரி சிபிஎம் குடியேறும் போராட்டம்

வேலூர், டிச.30 - வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கொண்டசமுத்திரம், செதுக்கரை, விநாயக புரம் பகுதிகளில் சுமார் 32 குடும்பங்களுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.  இதில் ஏராளமானோர் அங்கு வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப் பட்டு முறையாக அளவீடு செய்து தராமலும் பல ஆண்டுகளாக அரசு பதிவேட்டிலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால் அம்மக்களுக்கு அரசு சலுகைகள் எதுவும் கிடைக்கப் பெற வில்லை.  எனவே இடத்தை அளந்து தரக்கோரி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகிய அனைவரிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை அரசு பதிவேட்டில் உடனே பதிவு செய்ய கோரி கடந்த செப்.12-ல் அன்று காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தின் விளைவாக அப்போது இடத்தை அளவீடு செய்ததோடு, ஒரு மாதத்திற்குள் ஆன்லைன் பட்டா வழங்கு வதாக வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.  ஆனால் 3 மாதங்களாகியும் இதுநாள் வரை ஆன்லைன் பட்டா வழங்காததை கண்டித்தும், உடனே பட்டா வழங்க வலியுறுத்தி குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் சார்பில் தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன் தலை மையில் குடியேறும் போராட்டம் நடை பெற்றது. கிளை செயலாளர் சண்முகம் உறுப்பினர்கள் அண்ணாமலை மார்கபந்து பிச்சாண்டி முன்னிலை வகித்தனர். போராட்டத்தை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.சாமிநாதன், சி.சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.காத்த வராயன், பி.குணசேகரன், நகர செயலாளர் குபேந்திரன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் குமாரி, கோட்டீஸ்வரன், ரவி, கார்த்திகேயன், பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டக் களத்திற்கு நேரடியாக வந்து வருவாய் கோட்டாட்சியர் சுப லட்சுமி, வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்ற னர். அரசு அதிகாரிகளிடம் பட்டா வழங்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் அனைவரின் பதிவு களும் கணினியில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. ஆனால் திடீரென வருவாய் துறை கீழ்வரும் தமிழ் நிலம் செயலி தமிழ்நாடு முழுவதும் முடங்கியுள்ளதால் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பிரச்சனை சரி செய்தவுடன் 32பேருக்கும் பட்டா வழங்கு வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.