குடிநீர் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை சரி செய்திடுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிபிஎம் கோரிக்கை
சென்னை, ஜூலை 23- சென்னை பெருநகர மாநகராட்சி மண்ட லம் 3க்குட்பட்ட வார்டு 32இல் குடிநீர் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நடை முறை சிக்கலை சரி செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாத வரம் செங்குன்றம் பகுதிக்குழு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட மண்டலம் 3க்குட்பட்ட வார்டு 32இல் குடிநீர் இணைப்புகள் புதிதாக பதியப்பட்டு, குடிநீர் இணைப்பு வழங்க பழைய குடிநீர் இணைப்புகளை துண்டித்து விட்டு, புதிய இணைப்புகள் வழங்குவதாக அறிகிறோம். அவ்வாறு புதிய இணைப்புகள் வழங்கும் சூழலில் ஏற்கெனவே குடிநீர் இணைப்புக்கான வரியை செலுத்தி தொடர்ந்து இணைப்பை பயன்படுத்தி வரும் நிலையில், புதிதாக குடிநீர் இணைப்பை வழங்க பட்டா, பத்திரப்பதிவு வீட்டு வரி, குடிநீர் வரி போன்ற ஆவணங்கள் இருந்தால் மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள். குடிநீர் இணைப்பு புதிதாக வழங்கு பவர்களுக்கு கேட்க வேண்டிய ஆவ ணங்களை ஏற்கெனவே முறையாக வரி செலுத்தி பயன்படுத்திக் கொண்டிருக்கும் பயனாளிகளிடம் மீண்டும் ஆவணங்களை கேட்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. கடந்த கால ஆட்சியில் அழைத்தால் இணைப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த வர்கள் குறைந்தபட்ச ஆவணங்களை சமர்ப்பித்து இணைப்பை பெற்றுள்ளனர். ஆனால் தற்போது குடிநீர் இணைப்பு பெற, கழிவுநீர் இணைப்பு பெற அதிகப்படியான ஆவணங்கள் கோருவது பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் 32ஆவது வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளும் உள்ளன. பல நுகர்வோர்கள் ஏற்கெனவே முறையாக வரி செலுத்தி வரும் நிலையில் விற்பனை பத்திரம் பெறாத நிலையில் அவர்கள் எப்படி பட்டா மற்றும் விற்பனை பத்திரங்களை வழங்க முடியும். எனவே ஏற்கெனவே குடிநீர் இணைப்பு பெற்று வரும் நுகர்வோர்களுக்கு எவ்வித ஆவ ணங்களும் இன்றி அவர்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. இதில் பகுதிச்செயலாளர் வி.கமல நாதன், நிர்வாகிகள் ஆர்.ரவிக்குமார், இளங்கோவன், ரமேஷ், வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை மாநில அரசு துவங்க வேண்டும் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை
திருவள்ளூர், ஜூலை 23- அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் பணிமனை கமிட்டியின் ஆண்டு பேரவை திங்களன்று (ஜூலை 22), திருவள்ளூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.மாயகண்ணன் தலைமை தாங்கினார்.பகுதி செயலாளர் என்.யு.கோபி வேலை அறிக்கையையும், பொருளாளர் எம் எஸ்.வீரபாபு வரவு செலவு கணக்கை முன்மொழிந்தனர். ஓய்வு பெற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஆர்.சங்கரன் வாழ்த்தி பேசினார். அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் காஞ்சி மண்டல பொதுச் செயலாளர் பி.சீனிவாசன் நிறைவுரையாற்றினார். புதிய நிர்வாகிகள் திருவள்ளூர் பணிமனை கமிட்டியின் தலைவராக ஏ.டி.விஜயன், செயலாளராக என்.யு.கோபி, பொருளாளராக எம்.எஸ்.வீரபாபு உள்ளிட்ட 9 பேர்கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் ஓய்வு பெற்ற நாளன்றே பணப்பலன் களை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 106 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் ஜப்பான் நிறுவனம் ரூ. 225 கோடியில் விரிவாக்கம்
சென்னை, ஜூலை, 22 ஜப்பானின் ஷிபௌரா மெஷின் நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய ஷிபௌரா மெஷின் இந்தியா (எஸ்எம்ஐ) நிறுவனம், உயர் துல்லிய இன்ஜெக்ஷன் மோல்டிங் (High-precision Injection Moulding) இயந்திரங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள இந்நிறுவன ஆலையில் 2-ஆவது பிரிவின் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக ரூ. 225 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 1,200 இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரங்களையும் அதன் உதிரி பாகங்களையும் தயாரிக்கிறது. நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இது தவிர வட அமெரிக்காவில் 45 நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், தெற்காசிய நாடுகள் உள்ளிட்டவற்றிலும் இந்நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். புதிய விரிவாக்க நடவடிக்கை மூலம் எஸ்.எம்.ஐ. நிறுவனம் படிப்படியாக தனது ஆண்டு உற்பத்தித் திறனை 4,000 ஆக உயர்த்திக் கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.
பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வட்டியுடன் நிலுவை தொகை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி, ஜூலை 23- பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 18 விழுக்காடு வட்டியுடன் நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாப்ஸ்கோ நிறுவனத்தை 3 ரேசன் கடைகள் மூலம் மாநில அரசு துவங்கி யது. பின்னர் காய்கறி அங்காடி கள், மருந்தகம், பெட்ரோல் பங்குகள், மது பானம் விற்பனை உள்ளிட்ட பிரிவு வியா பாரங்களை படிப்படியாக விரிவுபடுத்தியது. காலப்போக்கில் அதிகாரிகளின் அலட்சியத்தால் நிர்வாகத்திறன் காரண மாக நலிவடைய துவங்கியது. நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை நிறு வனத்தில் பணிபுரிந்த 130 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதை யடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய மாத ஊதியம் வழங்கப்பட வில்லை. ஊதியம் வழங்க பட்டதை எதிர்த்து ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழி யர்கள் சார்பில் 142 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2018 ஆம் ஆண்டு முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் இஎஸ்ஐ உள்ளிட்ட எந்த உரிமை கள், சலுகைகளையும் நிறுவனத்திடம் இருந்து பெற முடியவில்லை. எனவே, 18 விழுக்காடு வட்டியுடன் ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார். இவ்வழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி நடைபெற்றது. ஊழியர்கள் சார்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு வாதாடினார். அரசு மற்றும் ஊழியர்கள் என இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், ஊழியர்கள் சார்பில் வைக்கப்பட்ட நிலுவை ஊதியத்துடன் 18 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து நிலுவை ஊதியம் 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
போட்டித் தேர்வில் வெற்றிபெற மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி
சென்னை, ஜூலை 23 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில், ஆண்டுதோறும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படவுள்ளது. இதற்கான பயிற்சி முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இவ்வறிவிப்பினை நடை முறைப்படுத்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 14.09.2024 அன்று நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA) தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற ஏதுவாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்திடும் வகையில் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக சி.எஸ்.ஐ. காது கேளா தோருக்கான மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் உயர் சாலை மயிலாப்பூர் சென்னையில் நடத்தப்பட உள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் 29.07.2024க்குள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரக scdaplacement@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலையில் 01.08.2024 அன்று சி.எஸ்.ஐ. காது கேளா தோருக்கான மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் உயர் சாலை மயி லாப்பூர் சென்னையில் காலை 10 மணியளவில் நடத்தப்பட உள்ள சிறப்பு பயிற்சியில் நேரில் வந்து விண்ணப்பித்து கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாநகராட்சி முதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
கடலூர், ஜூலை 23- கடலூர் நகராட்சியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மாநகராட்சியாக அறி விக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார். கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதால் ஆட்சியர் பொறுப்பில் உள்ளவர்கள் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப் பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டு களாக பலர் ஆணையாளராக நிய மிக்கப்பட்டனர். அதன்படி கடந்த ஆணையராக காந்திராஜ் இருந்தார். தமிழகம் முழுவதும் மாநக ராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி கடலூர் மாநகராட்சி ஆணையாளராக ஐஏஎஸ் பொறுப்பில் உள்ள அனு என்பவரை தமிழக அரசு நிய மித்தது. கடலூர் மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐஏஎஸ் அதி காரி நியமிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட புதிய ஆட்சிய ராக ஆதித்யா செந்தில்குமார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றுள்ள நிலை யில் அவரது மனைவி அனு கடலூர் மாநகராட்சியில் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மாமண்டூரில் ஜல்லி குவியல் அகற்றம்: சிபிஎம் போராட்டம் வெற்றி
திருவண்ணாமலை, ஜூலை 23- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மங்கலம் மாமண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாமண்டூர் கிராமத்தில் கூட்டுச் சாலை வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சிபிஎம் நிர்வாகி அரிதாசுக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கட்டப்பட்ட கடைகளைத் திறக்க முடியாத வண்ணம், வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் ஜல்லிக் குவியலை கொட்டி இடை யூறு செய்து வந்தனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், செவ்வாயன்று (ஜூலை 23) வந்தவாசி நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, திங்களன்று இரவு ஜல்லி குவியலை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.