நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் வள்ளலார் நகரில் செவ்வாயன்று (ஜூன் 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.ஜெயராமன், மா.பூபாலன், உள்ளிட்டோர் பேசினர்.
ஒன்றிய பாஜக அரசின் அக்னி பாத் திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சி எழும்பூர் பகுதி சார்பில் திங்களன்று (ஜூன் 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா, பகுதிச்செயலாளர் கே.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், கிளைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்மிடிப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (ஜுன் 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.
வாலிபர்களின் வேலை வாய்ப்புக் கனவுகளை சீரழிக்கும் விதமாக பாஜக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரி காஞ்சிபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.சுகுந்தன் தலைமையில் சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் டி.எல்.கார்த்திக், பா.வடிவேலன், கௌரி சங்கர், ஆனந்தன், எம்.தினகரன், ஜெனிட்டன் ஆகியோர் பங்கேற்றனர்.