districts

img

அமித்ஷா கண்டித்து மாதர்பாக்கத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

டாக்டர்.அம்பேத்கரை இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று (டிச 26), மாதர்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஈகுவார்பாளையம் கிளை செயலாளர் ஏ.ரவி தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.ராஜேந்திரன்,  ஜி.சூரியபிரகாஷ், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், வட்டக் குழு உறுப்பினர் எம்.வெங்கட்டாதிரி, பி.கருணாமூர்த்தி, கோபால் ஆகியோர் பேசினர்.

பொங்கல் சிறப்பு தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (டிச 27), பொன்னேரியில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் லூர்துசாமி,  மாவட்ட தலைவர் எம்.நாகராஜன், சிஐடியு நிர்வாகிகள் எம் சந்திரசேகர், கே.அர்ஜுனன், எம் .சி.சீனு ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூபாய் 5 ஆயிரம் வழங்க தமிழ்நாடு அரசையும், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தையும்  வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று (டிச.27) காஞ்சிபுரம் உத்திரமேரூர் குன்றத்தூர் படப்பை ஆகிய ஐந்து மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் பி.ரமேஷ், ஆர்.மதுசூதனன், சங்கத்தின் மாவட்ட செயலாளர்  ஆர்.கார்த்திக், மாவட்ட தலைவர் பச்சையப்பன், பொருளாளர் சி.சண்முகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி, சேலை பொங்கல் தொகுப்புடன் ரூ 5 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்டத் தலைவர் டி.பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ், சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.திருமலை, மாவட்ட நிர்வாகிகள் எம்.கலைச்செல்வி, இ.ராமமூர்த்தி, செல்வகுமார் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.