districts

img

கைவண்டூரில் விஏஓ அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கோரி சிபிஎம் போராட்டம்

திருவள்ளூர், நவ. 3- திருவள்ளூர் அருகில் உள்ள கைவண்டூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. இதை அதிகாரிகள் கண்டுக்கொள்ள வில்லை. இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தார். ஆனால், இது நாள் வரை அலுவலகம் கட்டிட எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. நிரந்தரமான அலுவலக இல்லாததால் கிராம பதிவேடுகள் பாதுகாப்பதில் சிரமம் உள்ள தாக பொதுமக்கள் வேதனையுடன் தெரி வித்தனர். வாரிசு, இறப்பு சான்றிதழ், வருமான வரி, சிட்டா, அடங்கல், இருப்பிட சான்றிதழ் போன்ற ஆன்லைன் மூலம் விண்ணப்பித் தாலும், அந்த ஆவணங்களை பெற கிராம நிர்வாக அலுவலர் நேரடி யாக விசாரணை செய்ய வேண்டும். ஆனால் அலுவலகம் இல்லாததால் மக்கள் அநியாயத்திற்கு அலைகழிக்க படுகின்றனர். கிராம நிர்வாக அலுவலகத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அக்.29   அன்று திருவள்ளூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்த னர்.  இதனையொட்டி அக்.28 அன்று திரு வள்ளூர் வட்டாட்சியர் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்ட வேண்டிய வருவாய் துறைக்கு மொத்தம் 32 கட்டடங்கள் கட்ட மதிப்பீட்டு அறிக்கையை தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி உள்ளதாகவும் அதன் விவரத்தை எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் கைவண்டூர்  ஊராட்சிக்கு,  கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கான குடியிருப்புக்கு என சேர்த்து மொத்த தொகை ரூ. 20 லட்சத்து 35 ஆயிரம்  மதிப்பீட்டு அறிக்கையை அளித்துள்ளதாகவும் விரைவில் இந்த கட்டுமான பணி தொடரும் என்று வட்டாட்சியர் வாசுதேவன்  உறுதிய ளித்தார்.  இதனடிப்படையில் மீண்டும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.தமிழ்அரசன், மாவட்ட குழு உறுப்பினர் இ.எழிலரசன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கலையரசன்,  வட்டக் குழு உறுப்பினர் டி.ஆனந்தன், சிஐடியு நிர்வாகி வி.மணி ஆகியோர் பங்கேற்றனர்.