districts

img

ஊழல் அதானியை கைது செய்யக்கோரி சிபிஎம் போராட்டம்

சூரிய ஒளி மின்சார ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தியும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கடலூர் ஜவான்ஸ் பவன் அருகில் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், திருவண்ணாமலை ஸ்டேட் வங்கி அருகில் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மாவட்டக்குழு உறுப்பினர் எல்.முருகேசன், செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பில் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், கிருஷ்ணகிரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் எஸ்.சிலம்பரசன், சி.சரவணன், வி.குபேந்திரன், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர், தென்சென்னை மாவட்டம் பல்லாவரத்தில் பகுதிச்செயலாளர் எம்.தாமோதரன், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் செயலாளர் என்.கங்காதரன்  ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் கோ.மாதவன் (கடலூர்), ஆர்.வேல்முருகன்(தென்சென்னை). பி.எஸ். பாரதி அண்ணா (செங்கல்பட்டு), கே.நேரு (காஞ்சிபுரம்), எஸ்.டி.சங்கரி (வேலூர்) மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எஸ்.ஜி.ரமேஷ் பாபு,  எம்.சிவக்குமா, இ.முத்துக்குமார்  ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,நகர மற்றும் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.