கடலூர், ஆக.19- கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த குருவப்பன் பேட்டை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளி (வயது 59) என்பவர் தனியார் மைக்ரோ நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு மூலம் ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்தார். வறுமை மற்றும் வேலையின்மை காரண மாக மாத தவணை கட்ட முடியாத நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறு வனத்தினர் வள்ளியை தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிஞ்சிப் பாடியில் உள்ள மைக்ரோ நிதி நிறுவனத்தை முற்றுகை யிடும் போராட்டம் அறி வித்திருந்தது. காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து முற்றுகை போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடை பெற்றது. நுண் நிதி நிறுவனத்தின் பிடியிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த வள்ளியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், வள்ளியம்மாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவன ஊழி யர்கள் மீது சட்ட ரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.தண்டபாணி தலைமை தாங்கினார். வடலூர் நகர அமைப்பா ளர் ஆர்.இளங்கோவன், குறிஞ்சிப்பாடி நகர அமைப்பாளர் மணி வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ராஜு, ஆர்.சிவகாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அழகுமுத்து, கதிர்வேல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.