திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் மேம்பாலப் பணி கடந்த 2014ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை முடிக்கப்படாமல் உள்ளதை விரைந்து முடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழு உறுப்பினர் அருமைராஜ் தலைமையில் சனிக்கிழமை (நவ. 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி, வெங்கட்டய்யா, மணிவண்ணன், முருகன், சுரேஷ், மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.