இராமநாதபும், டிச.25- இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க ட்சியின் சார்பில் தங்கச்சி மடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஜேம்ஸ் ஜஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வி.காசி நாததுரை கண்டன உரையாற்றினார். இதில் தாலுகாகுழு உறுப்பினர் வி.பழனிக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் இ.ஜஸ்டின், ஏ.ஆரோக்கிய நிர்மலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்க .கருணாகரன், தாலுகா செயலாளர் ஜி.சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.