districts

img

மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக மோசடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் 8 மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய, வட்டார செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், மங்கலம் மாமண்டூர் கூட்டு சாலை, கோழிப் புலியூர் கூட்டு சாலை, கலசப்பாக்கம், வெம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் செயலாளர் எஸ். தயாநிதி பங்கேற்று கண்டன உரையாற்றினார். குடியாத்தம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, கலவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட அமைப்பாளர் என். காசிநாதன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். கிருஷ்ணகிரி வட்டம், தளி ஒன்றிய குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உள்ளிட்ட பலர் உரையாற்றினர். புதுச்சேரியில் பாகூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செய லாளர் ப.சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பி னர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன், பிரபு ராஜ் உள்ளிட்ட பலர் உரை யாற்றினர்.

;