புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டடத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (டிச.23) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் வட்டச் செயலாளர் வீ.அன்பழகன் தலைமை தாங்கினார் . மாவட்ட குழு உறுப்பினர் பி.முத்துலட்சுமி, நிர்வாகிகள் ஆர்.ராஜேந்திரன், ஆர். மகாலிங்கம், திட்டக்குடி நகர செயலாளர் டி.வரதன், பெண்ணாடம் நகர செயலாளர் பி.அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.