districts

பெண்ணாடத்தில் ரயில்கள் நின்று செல்லக் கோரி சிபிஎம் மறியல்

கடலூர், நவ.12- பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், பெண்ணாடம் ரயில் நிலை யத்தில் அனைத்து ரயில்க ளும் நின்று செல்ல வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது.  தாழ் நல்லூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் விரைவு வண்டி நின்று செல்ல வலியுறுத்தியும், பெண்ணாடம் ரயில் நிலை யம் சாலையை விரிவாக்கம் செய்து புதிய சாலை அமைத்திட கோரியும் திட்டக்குடி வட்டக் குழு சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.இரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், வட்டச் செயலாளர் வி.அன்பழகன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கே. சரவணன்,  வாலிபர் சங்கம் மாவட்டத் தலைவர் சின்னத்  தம்பி, மாதர் சங்க மாவட்ட துணைத் தலை வர் பி.முத்துலட்சுமி,  பெண்ணாடம் நகர செய லாளர் பி.அரவிந்தன், போக்குவரத்து மாவட்ட தலைவர் எஸ்.மணிகண்டன்,  பெண்ணாடம் பேரூராட்சி கவுன்சிலர் விஸ்வநாதன், நகர் குழு உறுப்பினர்கள் வி.பாலகிருஷ்ணன், என்.பரதன், டி.வரதன், ஏ.அரி பாபு, எம்.சுமதி, ஆர்.மாணிக்கவேல், ஆர்.மாய வேல், எல்மாயவன், ஜி.முத்துலட்சுமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கோரிக்கைகளை நிறை வேற்றுவது குறித்து ஆர்டிஓ தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி யளித்தார்.