மாதவரம் மண்டலம் 3க்குட்பட்ட 32ஆவது வட்டத்தில் பாரதிதாசன் நகர், சூரப்பேடு இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு வழங்குவதில் நிலவும் குளறுபடிகளை சரி செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாதவரம் - செங்குன்றம் பகுதிக்குழு சார்பில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார். இதில் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.ஆனந்தன், ஆர்.ரவிக்குமார், கிளைச் செயலாளர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.