districts

img

ரேசன் கடைகளை திறக்கக்கோரி முதல்வர் ரங்கசாமியிடம் சிபிஎம் மனு

புதுச்சேரி,பிப்.20- புதுச்சேரியில் ரேசன்கடைகளை திறக்ககோரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வலி யுறுத்தியுள்ளனர். புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன்கடைகளை திறந்து அத்தியா வசிய பண்டங்களை வழங்ககோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் 2வது நாளாக செவ்வாய்கிழமை போராட்டம் நடைபெற்றுக் கொண்டி ருந்த நிலையில், முதல்வர் ரங்க  சாமியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம்,மூத்த தலைவர் சுதாசுந்தர ராமன்,மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள்,ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து ரேசன் கடையில்  பணம் வழங்குவதை கைவிட்டு மீண்டும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர். முதல்வருடன் சந்திப்பு மார்க்சிஸ்ட்  கட்சியின் கோரிக்கை  மனுவை பெற்று கொண்ட முதல்வர் ரங்கசாமி,குடிமை பொருள் வழங்கல் துறையின் இயக்குநர் சக்தி வேலை அழைத்து பேசினார். அண்டை மாநிலங்களில் பொருட்கள் வழங்குவதை போல் புதுச்சேரியிலும் வழங்குவதற்கு உண்டான நட வடிக்கைகளை துறை சார்பில்  கோப்புகளை தயார் செய்யுமாறு முதல்வர் கேட்டுகொண்டார். ரேசன்கடைகளை திறக்க எனது அரசு முழு நடவடிக்கை எடுக்கும் என்று தலை வர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறினார். போராட்டம் தொடரும் ரேசன்கடை திறக்கப்படும் என்ற அறிவிப்பு பிப்.22ல் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி அதிகார பூர்வ மாக தெரிவிக்க வேண்டும். அது வரை காத்திருப்பு போராட்டம் தொட ரும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் முதல்வரை சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் கூறினார். 2வது நாள் போராட்டம் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவ காரங்கள் துறை அருகில் நடை பெற்று வரும் 2வது நாள்  காத்தி ருப்பு போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேர நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.  மூத்த தலைவர் த.முருகன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலிம், திராவிடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி, கிராமப்புற நீர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கோபால் ஆகி யோர் போராட்டத்தை வாழ்த்தி பேசி னர். இப்போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றுள்ளனர்.