கடலூர்,மே.5- சிபிஎம் முன்னாள் நகரக்குழு உறுப்பின ரும், சிஐடியு நெய்வேலி பகுதி முன்னாள் இணைசெயலாளருமான தோழர் எஸ்.சங்கர் சனிக்கிழமையன்று உடல்நலக்குறை வால் காலமானார் அவருக்கு வயது85, நெய்வேலியில் சிஐடியு தொடங்கிய திலிருந்து அதில் இணைந்து தொழி லாளர்களின் நலக்காக பாடுபட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பால்ஈர்க்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் களம் கண்டார். அவரின் மகன் மறைந்த எஸ். கார்த்தி கேயன் வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகி யாகவும், சிபிஎம், சிஐடியு ஆகிய அமைப்புகளில் பல்வேறு பொறுப்பு களிலும் பணியாற்றியவர். நெய்வேலி இந்திரா நகர் அருகிலுள்ள ரோஜா நகரில் உள்ள அவரின் இல்லத்தில் பொதுமக்களில் அஞ்சலிக்காக சங்கரனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மருத்துவ மனையில் அஞ்சலி செலுத்தினர். மாநிலச்செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகு மாரன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாதர் சங்க மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. கருப்பையன், டி.ஆறுமுகம், எஸ்.திருஅரசு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.மாதவி, கடலூர் நகர செயலாளர் ஆர்.அமர்நாத், நெய்வேலி நகர செய லாளர் ஆர். பாலமுருகன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.