districts

img

மணலியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் சிபிஎம் மணலி பகுதி மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 25- மணலி பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் மணலி பகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் மணலி - சேக்காடு பகுதி 9ஆவது மாநாடு மணலியில் ஞாயிறன்று (ஆக. 25) நடைபெற்றது. மூத்த தோழர் சி.அருணாச்சலம் கட்சிக் கொடியை ஏற்றினார்.  பகுதிக்குழு உறுப்பினர் ஏ.துரைராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்தீஷ் குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பகுதி செயலாளர் டி.பாபு வேலை அறிக்கையையும், எஸ்.முருகன் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயகுமார் வாழ்த்தியும் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் மாநாட்டை நிறைவு செய்தும் பேசினர். முன்னதாக பி.பத்மநாபன்  வரவேற்றார். எஸ்.நீலவேணி நன்றி கூறினார்.