நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு சிபிஎம் மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. அதை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி வழங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.