காஞ்சிபுரம், அக் 13 - சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், உடனடியாக சங்கத்தை பதிவு செய்ய தமிழக அரசு தலையிட வேண்டும் என்றும் சிபிஎம் குன்றத்தூர் வட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8ஆவது குன்றத்தூர் வட்ட மாநாடு படப்பையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்தார். வட்டச் செயலாளர் கே.புரு சோத்தமன் வேலை அறிக்கையை சமர்ப்பிக்க, மாநிலக் குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பி னர் ப.வடிவேலன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் சி.சங்கர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக முன்னாள் வட்ட செயலாளர் டி.லிங்கநாதன் செங்கொடியை ஏற்றிவைக்க, வட்டக்குழு உறுப்பினர் எஸ்.திருஞானம் வரவேற்றார். ஆர்.நந்த கோபால் நன்றி கூறினார். தீர்மானம் குன்றத்தூர் வட்டத்தில் பல ஆண்டுகளாக கிராம நத்தம் மற்றும் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் பட்டா வழங்கு வேண்டும். படப்பை யில் கடந்த நான்கு ஆண்டு காலமாக ஆமை வேகத்தில் கட்டப்படும் மேம்பாலத்தை விரைவாக முடித்திட வேண்டும். குன்றத்தூர் அரசு பள்ளியில் இயங்கும் அரசு கலை கல்லூ ரிக்கு உடனடியாக மாற்றிய இடம் ஒதுக்கீடு செய்து கட்டு மான பணியை துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய வட்டக்குழு தேர்வு மாநாட்டில் 14பேர் கொண்ட குன்றத்தூர் வட்டக்குழு செயலாளராக கே.அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்டார்.