districts

கிராம கணக்கில் பட்டா பதிவேற்றம் சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு வெற்றி

கள்ளக்குறிச்சி, பிப்.10- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் உள்ள செம்மணங்கூர் கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப் பட்டன. பல ஆண்டு கால மாக இந்த பட்டாக்களை கிராம கணக்கில் பதிவு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் அந்த மக்கள் அரசின் இலவச திட்டங்கள் மற்றும் சலுகைகள் எதையும் பெற முடியவில்லை. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் 29.9.2023 அன்று பாதிக்கப் பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து துறை அதிகாரி களை சந்தித்து முறையீடு செய்து வந்தனர். இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு சார்பில் கெடிலம் காட்டுச் செல்லூர் ஊராட்சி யில் நடைபெற்ற நலத்திட்டங் கள் வழங்கும் விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு 28 குடும்பங்களுக்கும் பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்து கொடுத்தார். சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிகண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனி ருந்தனர்.