districts

img

உட்கட்சி ஜனநாயகம் வலுவாக உள்ள இயக்கம் சிபிஎம்

கள்ளக்குறிச்சி, நவ.9 - மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டுமே உட்கட்சி ஜன நாயகம் வலுவாக உள்ளதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார்.  உளுந்தூர்பேட்டையில் சனிக்கிழமை (நவ,9) கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட 24 வது மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசியது வருமாறு;  சமீபத்தில் ஒரு  புதிய கட்சி மாநாட்டை நடத்தியது. எல்லா தொலைக்காட்சி களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான இளை ஞர்கள் கலந்து கொண்டார்கள். கடைசியாக ஒருவர் பேசி ஒட்டு மொத்த மாநாட்டையும் நிறைவு செய்து வைத்தார். அங்கு வந்த வேறு யாருக்கும் அந்த மாநாட்டின் பங்களிப்பு குறித்து எதுவும் தெரியாது.மற்ற கட்சிகளில் மாநாடு எப்படி நடக்கும் என்றால் பிரமாண்டமாக மக்களை திரட்டி தலைவராக இருப்பவர் யாரோ ஒருவர் தயாரித்துக் கொடுத்த உரையை 40 நிமிடம் பேசி முடித்து விடுவார். இது போன்றுதான் பலகட்சிகளில் மாநாடு நடைபெறுகிறது.  ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்படிப்பட்ட   கட்சியல்ல. இந்த பேரணி பொதுக் கூட்டம் என்பது நமக்கு ஒரு தொடக்கம்தான். இந்த மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற 250 பிரதிநிதிகள்  இந்த மாவட்டத்தில் இருக்கிற மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் குறித்தும் கடந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் பிரச்சனைகளுக்காக எப்படி போராடி இருக்கி்றோம் இதில் கிடைத்த வெற்றி, தோல்வியை  அலசி ஆராய்ந்து எதிர்கால இயக்கங்களுக்கு திட்ட மிடும் வகையில் மாநாடுகளை நடத்தி வருகிறோம்.  பல்வேறு தரப்பு மக்களுக்கும் வியாபாரிகள், கூலித்தொழிலா ளர்கள், சுமை தூக்கும் தொழிலா ளர்கள்  இவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக எந்த வடிவில் போராட வேண்டும்என்பது குறித்து விவாதிப்பதுதான் நமது மாநாடு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் என்பதில் பெருமை உண்டு. இங்கு கட்சித் தலைவர்கள் விரும்புகின்ற மாதிரி கட்சி நடத்த முடியாது. கட்சியின் பிரதிநிதிகள்  தங்களது கருத்தை முழுமையாக தெரிவிக்கும் உரிமை உண்டு. கட்சியின் மீதோ கட்சித் தலைவர்களின் மீதோ தவறுகள் ஏதேனும் இருந்தால் தட்டிக் கேட்கும் உரிமையை சிபிஎம் தனது உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது. வேறு எந்த அரசியல் கட்சிகளில் தலை வர்களை நேரடியாக பார்த்து கேள்வி கேட்கும் உரிமை தொண்டர்களுக்கு  கிடையாது. கேட்கவும் முடியாது. குடும்ப வன்முறை செய்பவர்களுக்கும் பெண்களுக்கு எதிராக சமூக குற்றங்களில் ஈடுபடுபவர்க ளுக்கும் நமது கட்சியில் இட மில்லை. மிகுந்த கட்டுப்பாடு உள்ள கட்சி என்பதால் நம்மால் வேகமாக வளர முடியவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவியை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் நியாயத்திற்காக முதல் குரல் எழுப்பியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். இன்றும் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் நம்மோடு பயணித்துக் கொண்டி ருக்கிறார்கள். காவல்துறையின் அத்துமீறல்கள் காவல் நிலை யத்தில் நடக்கும் கொடுமைகள் இவற்றில் எல்லாம் பாதிக்கப்பட்ட வர்களின் பக்கம் நிற்பவர்கள் கம்யூனிஸ்டுகளே. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மறைந்த பாஷா ஜான், கல்வராயன் மலைப்பகுதிகளில் ஆயிரக்க ணக்கான ஆதிவாசி மக்களை வனத்துறையினரின் பல கொடுமை களிலிருந்து பாதுகாத்த ஒரு மகத்தான தலைவர். இன்றைய சூழலில் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்காக 40க்கும் மேற்பட்ட நில பட்டாக்களை நமது போராட்டத்தின் மூலம் அவர்களுக்கு பெற்றுத்தந்தி ருக்கி்றோ்ம். பட்டியலின மக்கள் சாதிய ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம் நாம் முன்னின்று போராட வேண்டி உள்ளது. சாதிய அடக்கு முறை காரணமாக  இன்னமும் மேல்பாடி கோவில் திறக்கப்பட வில்லை.   மார்க்சிஸ்ட்கள் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பவர்கள். மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். ஆட்சி யாளர்கள் மக்களுக்கு விரோத மான சட்டங்களை இயற்றும் போதெல்லாம் அதனை கண்டித்து குரல் எழுப்புகிறோம். போக்கு வரத்து தொழிலாளர்கள் பிரச்சனை யாக இருந்தாலும்  சொத்து வரி உயர்வாக இருந்தாலும்  முதலில் அரசாங்கத்திடம் கோரிக்கையை எழுப்பியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

செம்படை பேரணி 

முன்னதாக கள்ளக்குறிச்சி  மாவட்ட மாநாட்டையொட்டி  விருத்தாசலம் சாலையில் செம்படை பேரணியை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன்  துவக்கி வைத்தார். அன்னை தெரசா நகரில் துவங்கிய பேரணி, உ.கீரனூர், ஈஸ்வரன் கோவில் தெரு, காயிதே மில்லத் தெரு, திருவெண்ணை நல்லூர் சாலை வழியாக உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் வந்தடைந்தது. பின்னர் மும்முனை மணிக்கூண்டு சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டி.எஸ்.மோகன் தலைமை தாங்கினார்.  பி.சேகர் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் என். குணசேகரன்,எஸ்கண்ணன், மாநில குழு பா.ஜான்சி ராணி, மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன், எம்.கே.பூவ ராகவன், வி. சாமிநாதன், எம். செந்தில் இ.அலமேலு, வி.ஏழு மலை, எம்.கே.பழனி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.முன்னதாக கல்லை குறிஞ்சி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.