districts

சென்னை முக்கிய செய்திகள்

நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு விசாரணைக்கு சிபிஎம் வலியுறுத்தல்

திருவள்ளூர், செப் 5- மேல்முதலம்பேடு ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் நடைபெற்று வரும்  முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொது மக்கள் வலி யுறுத்தியுள்ளனர். கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மேல் முதலம்பேடு ஊராட்சியில் 740 பேர் நூறு  நாள் வேலை செய்வதற்கான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. வேறு தொழில் இல்லாததால் அனைவரும் நூறு நாள் வேலையை நம்பியுள்ளனர்.ஆனால் ஆண்டுகளுக்கு நூறு  நாட்கள் முழுமை யாக வேலை கொடுப்பதில்லை. ஆண்டு களுக்கு 40 நாட்கள் மட்டும் சுழற்சி முறையில்  வேலை வழங்குகின்றனர். இந்நிலையில் செய்த வேலை நாட்களை  கூட கணினியில் குறைத்து காண்பிக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. ஒரே குழுவில்  பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வித்தியாசம் ஏற்படுகிறது. ரூ.150,   ரூ.175, சிலருக்கு ரூ. 200 ரூபாய் என ஏற்றத் தாழ்வாக வழங்குகிறார்கள். இதில் பெரிய அளவிற்கு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விலைவாசி உயர்வு மட்டும் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இன்றி சமமாக தாக்குகிறது. சம்பளத்தை உயர்த்தி கேட்டால்  போதிய அளவு வேலை நடைபெற வில்லை  என வலுவில்லாத காரணங்களை கூறுகின்ற னர். சிபிஎம் வேண்டுகோள்  மேல்முதலபேடு ஊராட்சியில் நூறு நாள் வேலை நடைபெறும் இடத்தில் குடிநீர்,  பந்தல், முதலுதவி பெட்டி, குழந்தைகளை பாதுகாக்க தனியாக பணியாட்களை நியமிக்கப்பட்ட வேண்டும். இதில் எதையும் அதிகாரிகள் பின்பற்றவில்லை. அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்கவில்லை என மக்கள் புலம்புகின்றனர்.ஒரு நாளைக்கு  அரசு நிர்ணயித்த சட்ட கூலி ரூ.319 இதனை  எப்போதும் வழங்கியதே கிடையாது. இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என்பது விதி. ஆனால் மேல்முதலம்பேடு ஊராட்சியில் ஜெசிபி-ல் மண் எடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொழி லாளர்களிடமும் ரூ.100 வாங்கியுள்ளனர். இதிலும் பெரும் அளவிற்கு ஊழல் நடந்துள் ளது. இதனை மாவட்ட ஆட்சியர் உரிய  விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து நூறு நாட்கள் வேலை  வழங்க வேண்டும் என சிபிஎம் கும்மிடிப் பூண்டி வட்டக்குழு உறுப்பினர் எம்.சி.சீனு, மேல்முதலம்பேடு கிளை செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர்.

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில்  இன்று கல்விக் கடன் சிறப்பு முகாம்

வேலூர், செப்.5- வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்விக் கடன் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி  வரை நடைபெறுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர்  வே.ரா. சுப்புலெட்சுமி விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிக ளில் பயிலும் மாணவர்கள்,பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம்  வகுப்பு முடித்து, மேற்படிப்பு தொடர முடியாமல் உள்ள  மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதில் இருந்து வரும் நடைமுறை சிக்கல்களை களைந்து கல்விக் கடன் பெறுவ தில் கல்விக் கடன் பெறுவது எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு  அரசு அனைத்து வங்கி அலுவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ஒருங்கிணைத்து சிறப்பு கல்வி கடன் முகாம் மற்றும் கடன் மேளா நடத்தவுள்ளது. இதன் முதல் கட்டமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள  அனைத்து மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள்,  தொழில்நுட்ப கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த  மாணவ மாணவியர்கள் பங்குபெறும் சிறப்பு கல்வி கடன் மேளா செப். 6 வெள்ளியன்று குடியாத்தம் கே.எம்.ஜி. கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை  5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான், ஆதார் அட்டை, சாதி, ஆண்டு வருமானம், முதல் தலைமுறை பட்டதாரி  சான்று மற்றும் கல்வி கடன் தேவை விவரம் ஆகியவற்று டன் முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிறுவனுக்கு மூளையில் ரத்தநாள கட்டி அகற்றம்

சென்னை, செப். 5 - சென்னையில் உள்ள முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் கிளெனீகல்ஸ் மருத்துவமனை மருத்து வர்கள் திருச்சியைச் சேர்ந்த 13 வயது சிறுவனின் மூளையில்  4.5 x 4.2 செ.மீ அளவுள்ள ரத்தநாள கட்டியை ஒரு நவீன அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.  வகுப்பில் முதல் மாணவனாக திகழும் அந்த சிறுவனுக்கு வலிப்பு நோய் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர் அவனை திருச்சியில் உள்ள நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அவனுக்கு மூளையின் ஆஞ்சியோகிராமுடன் இஇஜி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்செய்யப்பட்டது. ஆச்சரியமான ஒன்றாக, சிறுவனின் வலது கை மற்றும் காலின் இயக்க ங்களைக் கட்டுப்படுத்தும் மோட்டார் பகுதி முன் ஒரு  முக்கியமான இடத்தில் மூளையின் இடது பக்கத்தில் ஒரு பெரிய ரத்தநாள கட்டி இருப்பது தெரிய வந்தது. இந்த பாதிப்பானது 3வது கட்டத்தில் இருந்தது. மேலும் அதிக பாதிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான ரத்தப்போக்கு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதால் உடனடியாக சென்னைக்கு அழைத்துவரப்பட்டு  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நரம்பியல் துறை இயக்குநர் டாக்டர் தினேஷ்நாயக் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை மூத்த ஆலோச கரும் இந்தத் துறையின் தலைவருமான டாக்டர் நைஜல் சிம்ஸ் ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் குழு 8 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டது. இது குறித்து டாக்டர் தினேஷ் நாயக் கூறுகையில், மூளையில் உள்ள தமனிகள் மற்றும் நரம்புகளுக்கு இடையே ஒழுங்கற்ற இணைப்புகளை உருவாக்கும் மூளையில் ரத்தநாள கட்டி என்பது ஒரு அசாதாரண ரத்த நாள பிரச்சினையாகும். மேலும் இது எந்த பெரிய அறிகுறிகளும் இல்லாமல் சிறுவனுக்கு இருந்தது என்றார்.

சென்னை மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

சென்னை,செப்.5- நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளான வரும் 13, 17ம் தேதிகளில்  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க நாட்டிற்காக பாடுபட்ட  தலைவர்களான அண்ணா பிறந்த நாள்  பேச்சுப் போட்டி வரும் 13ம் தேதியும், பெரியார்  பிறந்த நாள் பேச்சுப் போட்டி வரும் 17ம்  தேதியும் கல்லூரி மாணவர்களுக்கு வட சென்னை, மத்திய சென்னை, தென்சென்னை  என 3 நிலைகளில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இப்பேச்சுப் போட்டி களில் வெற்றிபெறும் கல்லூரி மாணவர் களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு  ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.

வீர தீர செயல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி, செப்.5- வீர தீர செயல் புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு  தேசிய பெண் குழந்தை தினத்தில் பாராட்டு பத்திரம் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு அரசு  வழங்கி வருகிறது. எனவே, சாதனை பெண் குழந்தைகளுக்கு வருகிற ஜனவரி 2025-இல் மாநில அரசு விருது வழங்க உள்ளது. இதற்கு 13 வயதிற்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட தகுதியான  பெண் குழந்தைகள் https://Awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இணையவழி விண்ணப்பங்கள் இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு இணைய வழியில் விண்ணப்பித்த பெண் குழந்தையின் பெயர்,தாய் மற்றும் தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம், ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீரதீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாமல் குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்ட கருத்துருவை 5.10.2024 மாலை 5:45 மணிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

4வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை

சென்னை, செப்.5- பொத்தேரியில் உள்ள  பிரபல தனியார் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவன் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியதால் 4வது மாடியிலி ருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை அடுத்த பொத் தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழ கத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தவர் சீனிவாச நிகில் (20)‌. இவர், ஆந்திர மாநிலம் செகந்திரா பாத் பகுதியை சேர்ந்த வர். இவர், பல்கலைக் கழகத்திற்கு வெளியே அதே  பகுதியில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில், கடந்த 31ம் தேதி தாம்பரம் மாநகர  காவல் துறையைச் சேர்ந்த  500க்கும் மேற்பட்ட போலீசார் நிகில் தங்கி இருந்த தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நிகில் தங்கி இருந்த அறையில் இருந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார் நிகிலை எச்சரித்து, அறி வுரை கூறிய பிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால், மன உளைச்சலில்  இருந்த நிகில் செவ்வா யன்று  இரவு தனியார் குடியிருப்பின் நான்கா வது மாடியில் உள்ள தனது அறையின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற் கொலை செய்து கொண் டார்.

100 ஏக்கர் பஞ்சமி நிலத்தை   ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து  மீட்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

திருவண்ணாமலை,செப்.5- வந்தவாசி வட்டத்தில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள 100 ஏக்கர் பஞ்சமி தரிசு நிலங்களை  மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் அளித்து மனுவில், வந்தவாசி வட்டம், அருங்குணம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி தரிசு  நிலம்  1935 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பழங்குடி  மக்களுக்கு வழங்கியது. அந்த நிலம், இடைநிலை சாதியினரால் முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்டு, உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால், செப்.30, கம்யூ னிஸ்ட்  இயக்கத்தின் முதுபெரும் தலைவர்  பி. சீனிவாசராவ் நினைவு நாளில் நில மீட்பு  போராட்டம் நடத்துவோம் என்று கூறப்பட் டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல் காதர், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் சுகுமார், அருங்கணம் கட்சி உறுப்பினர் திலகராஜ் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.