வேலூர், டிச.19 - வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. திருப்பத்தூரில் சந்தன தொழிற்சாலை, குடியாத்தத்தில் கைத்தறி ஜவுளி பூங்கா, தொழில்நுட்ப பூங்கா ஆகியவைகள் அமைக்க வேண்டும், மூடப்பட்ட ஆம்பூர் சர்க்கரை ஆலை, காட்பாடி டெல் தொழிற்சாலை, அரியூர் கூட்டுறவு நூற்பாலை ஆகியவைகளை விரைந்து திறக்க வேண்டும். வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆறு பாலாறு. இதில் தோல் மற்றும் தோல் பொருட்கள் கழிவுகள் கலக்கப்படுகிறது. இந்த கழிவு களை கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 200 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் பாலாற்றில் நிலத்தடி நீரை சேகரிக்கும் வகையில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும், திருப்பத்தூர் நகரின் சேலம் சாலையில் வசிக்கும் டி எம் சி காலனி அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பேரூராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும், வாணியம்பாடி ரயில்வே மேம்பாலம் பணி களை உடனடியாக விரைந்து தொடங்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் அறி விக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் எவ்வித உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாமல் இன்றும் பல சாலைகள் குண்டும் குழியுமாகவும், பாதாள சாக்கடை பணிகள் முழுமை பெறாமலேயும் உள்ளது. இப்பணிகளால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்த ஏற்படும் நிலைமையும் உள்ளது.மேலும் மாநகர் முழுவதும் இணைக்கும் வகையில் பேருந்து வசதி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. வேலூரில் கொட்டும் மழையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் எஸ்.டி.சங்கரி தலைமை தாங்கினார். வேலூர் வடக்கு, தெற்கு, காட்பாடி செயலாளர்கள் கே. பாண்டுரங்கன், எஸ். செல்வி, ஆர். சுடரொளியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ.நாராயணன், செ. ஏகலைவன், சி.சரவணன் மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன் பி.குண சேகரன், சி.எஸ்.மகாலிங்கம் பெ. திலீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூரில் தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தயாநிதி கே.சாமிநாதன் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.காத்தவராயன் எஸ்.ஜோதி, அருள் சீனிவாசன், ஆம்பூர், வாணியம்பாடி செயலாளர்கள் ஆர்.மணிமாறன், பிச்சை முத்து, தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.காசி, ரவி, வெங்க டேசன் கேசவன், வீரபத்திரன், சரவணன், ஜெயராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.