மீனம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தில் நடைபாதை மீது நிரந்தர பயணச்சீட்டு அலுவலகம் அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர் இயக்கம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், சிபிஎம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனிடம், பக்தவச்சலம் நகர் குடியிருப்போர் பொது நலச் சங்க நிர்வாகிகள் சுந்தர்ராஜன், தமிழ் இனியன் ஆகியோர் இதற்கான கோரிக்கை மனு அளித்தனர். உடன் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், ஆலந்தூர் பகுதிச் செயலாளர் என்.வெங்கடேசன், பகுதிக்குழு உறுப்பினர் முரளி ஆகியோர் உள்ளனர்.