districts

img

நல்லாசிரியர் விருது பெற்ற வெற்றிச்செல்விக்கு சிபிஎம் வாழ்த்து

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி சண்முகம் நல்லாசிரியர் விருதுக்கு (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது) தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதை வழங்கினார். இதையடுத்து, வெற்றிச் செல்வியை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கேத்ரின் ஆகியோர்  வாழ்த்து தெரிவித்தார்.