districts

img

போளூர், களம்பூர் நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல சிபிஎம் மாநாடு கோரிக்கை

திருவண்ணாமலை, அக். 23 – போளூர், களம்பூர் ரயில் நிலை யங்களில்  விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போளூர்  வட்டார 10 ஆவது மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.  செவ்வாயன்று (அக்.22) போளூரில் நடைபெற்ற மாநாட்டில் ப.கிருஷ்ணமூர்த்தி கட்சிக் கொடியை ஏற்றினார். ப.ரவி வரவேற்றார்.  ப.சரவணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். இரா.சிவாஜி, மு.அஞ்சலி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் துவக்கி வைத்தார். வட்டார செயலாளர்  இரா. ரவிதாசன்  வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.லட்சுமணன், வாழ்த்தியும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன்  நிறைவு செய்தும் பேசினர். மு.அஞ்சலி  நன்றி கூறினார்.  புதிய வட்டக்குழு  8 பேர் கொண்ட இடை குழுவின் செயலாளராக இரா.இரவிதாசன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் போளூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயி களுக்கு தர வேண்டிய கரும்பு பாக்கி ரூ.12 கோடியை வழங்க வேண்டும்,  ஜவ்வாது மலையில் அமைந்துள்ள ஜமுனா மரத்தூர் சுற்றுலா தளமாக செய்ய வேண்டும்,  ராமேஸ்வ ரத்தில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் போளூர் ரயில் நிலையத்திலும், மன்னார்குடி செல்லும் பாமினி விரைவு ரயில் களம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.