மின்கட்டண உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் வியாழனன்று (ஜூலை 25) மத்திய சென்னையில் 6 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரம் விளக்கு பகுதியில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், எழும்பூர் பகுதியில் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, துறைமுகம் பகுதியில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன், வில்விவாக்கம் பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், ஆ.பிரியதர்ஷினி எம்.சி ஆகியோர் கலந்து கொண்டனர்.