districts

img

ஆர்.கே.பேட்டை மருத்துவமனையை, பொது மருத்துவமனையாக உயர்த்துக சிபிஎம் வட்ட மாநாடு வலியுறுத்தல்

 திருவள்ளூர், அக். 27- ஆர்.கே.பேட்டையில் உள்ள மருத்துவமனையை,  வட்டார பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.கே.பேட்டை-பள்ளிப்பட்டு வட்ட 24 வது மாநாடு ஞாயிறன்று (அக் 27) தோழர்கள் சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டையில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு வட்டக் குழு உறுப்பினர்கள் கே.ஜி.கணேசன், ஜி.லதா, எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த உறுப்பினர் சாந்தி கொடியேற்றினார்.வட்டக் குழு உறுப்பினர் ஆர்.வித்யா வரவேற்றார். ந.நந்தகுமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன் துவக்கவுரையாற்றினார்.வேலை அறிக்கையை பகுதி செயலாளர் அ.சிவபிரசாத் முன்மொழிந்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.மோகனா, சி.பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம் மாநாட்டை நிறைவுசெய்து பேசினார்.வட்ட குழு உறுப்பினர் என்.வஜ்ஜிரவேலு நன்றி கூறினார். தீர்மானங்கள் ஆர்.கே.பேட்டையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற  அமைக்க வேண்டும், வட்டார பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிமனை பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும்,  பழுதுபட்டுள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும், கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக்குழுத்தேர்வு 11 பேர் கொண்ட ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு வட்ட குழுவின்  செயலாளராக அ.சிவபிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.