திருவள்ளூர், செப்.20- மாளந்தூர் முதல் ஆவாஜிபேட்டை வரை பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வனத்துறை போடும் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் புதனன்று (செப் .20) சாலை மறியலில் ஈடு பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாளந்தூர் முதல் ஆவாஜிபேட்டை வரை 4 கி.மீ. தூரம் ஒன்றிய சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் விழுப்புரம் கோட்ட பேருந்துகள் தடம் எண் 92 பி, 73ஏ, மாநகர பேருந்து 580எம் ஆகியவை குறித்த நேரத்திற்கு வருவதில்லை. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சிபிஎம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. சாலை அமைக்க ஜல்லி உட்பட பொருட்களைப் இறக்கி பணிகள் நடைபெற்று வரு கிறது. இடையில் மாளந்தூர் வழித்தடத்தில் 600 மீட்டர் மற்றும் ஆவாஜிபேட்டை வழித்தடத்தில் 400 மீட்டர் என 1. கி.மீ. நீளத்திற்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை வருகிறது. இதற்கு வனத்துறை யினர் சாலை அமைக்க அனுமதி அளிக்கவில்லை. இந்த தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை. மாளந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை வனத் துறைக்கு தானமாக வழங்கியுள்ளனர். தானம் அளித்த கிராம மக்க ளுக்கே வழிவிட வனத் துறை மறுப்பது விநோத மாக உள்ளது. இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (செப்.20), மாளந்தூர் ஆலமரம் பகுதியில் சீத்தஞ்சேரி சாலையில் மறியல் நடைபெற்றது. மாளந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வி. விஜயன் தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் டி. பன்னீர்செல்வம், ஜி.சம்பத், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் கங்கா தரன், கன்னியப்பன், வட்டக் குழு உறுப்பினர்கள் ரமேஷ், குமார், அருள் உட்பட நூற்றுக்கும் மேற் பட்டவர்கள் கைதாகினர்.