மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொரியர் நிறுவன ஊழியர் கைது
சென்னை, செப். 9- சென்னையில் சாலையில் நடந்து சென்ற மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் கொரியர் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை செய்யும் 22 வயது மதிக்கதக்க இளம் பெண், கடந்த 5ஆம் தேதி அந்த நிறுவனத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், அந்த பெண்ணை மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள் ளார். இதனால் அந்த பெண் சத்தமிடவே, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து அந்த பெண், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதி களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மந்தைவெளி அப்பாவு இரண்டாவது தெருவைச் சேர்ந்த ரஞ்சித் (49) என்பது தெரியவந்தது. இதை யடுத்து காவல் துறையினர் ரஞ்சித்தை திங்கட்கிழமை கைது செய்தனர். ரஞ்சித், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு தனியார் கொரியர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிவது குறிப்பிடதக்கது.
வடசென்னையில் இன்று மின்தடை
சென்னை, செப். 9- வடசென்னையில் செவ்வாய்க்கிழமை (செப். 10) பெரம்பூர், மாதவரம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோ கம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித் துள்ளது. பெரம்பூர் காந்திநகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகள்,மாதவரம் டிரக் டெர்மினல் எஸ்.எஸ் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் அறிவியல் நிலையத்தில் பராமரிப்பு பயிற்சி
புதுச்சேரி,செப்.9- புதுச்சேரி குருமாம்பேட் காமராஜர் வேளாண் அறிவி யல் நிலையத்தில் தோட்டக்கலை பராமரிப்பு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற வர்களுக்கு நாற்றங்கால் தொழில்நுட்பம், மண்புழு உரம் தயாரித்தல், மண் பரிசோதனை முறை, நீர் பாசன முறை, மண் கலவை தயாரித்தல், இயற்கை உரம் தயாரித்தல், மாடித்தோட்டம், வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் நுண் கீரை வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவில் விவ சாய நலத்துறை இயக்குனர் வசந்தகுமார் பங்கேற்று பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு பயிற்சி கையேடு வழங்கினார். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் மணி மேகலை, முதன்மை பயிற்றுநர் சந்திரதரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.