districts

கள்ளச்சாராய சம்பவம் எதிரொலி மெத்தனால் விற்பனை செய்த 2 பேர் கைது

சேதராப்பட்டு, மே 16-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை, புதுவை அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   இது தொடர்பாக கள்ளச்சாராய வியா பாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

   இந்த நிலையில் செவ்வாயன்று காவல் துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மரக்காணம் வந்து கள்ளச்சாராய வழக்கு குறித்து காவல் துறையினரிடம் கேட்ட றிந்தார். இந்த வழக்கு தொடர்பாக மரக்காணம், அனுமந்தை, நடுக்குப்பம், ஆலந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 10 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  அவர்கள் அளித்த தகவலின்படி, மெத்தனால் விற்பனை செய்த புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த பர்கத் (எ) ராஜா, ஏழுமலை ஆகிய 2 பேரை மரக்காணம் காவல் துறை யினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மெத்தனால் எங்கி ருந்து கிடைத்தது. அதனை யாரிடம் விற்றனர்? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படு கிறது.

   மேலும், இதில் அரசியல் கட்சி யினர் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரு கின்றனர்.