கள்ளக்குறிச்சி காவலர்கள் கூண்டோடு மாற்றம்
கள்ளக்குறிச்சி, ஜூலை 9- கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துறை கூண்டோடு மாற்றப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். குறிப்பாக கள்ளக் குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த 39 காவலர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 39 காவலர்கள் புதிதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுகவின் திசை வழி என்ன?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் யாருக்கு என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறி இருக்கும் நிலையில் தேர்தலை புறக்கணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்கள் தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்வது ஜனநாயக விரோத செயல். அதற்கு மாறாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய நோட்டா விற்கு வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற முன் வரவேண்டும். 18 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மத்திய பிரதேசம் இந்தூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பாம் பாஜக வேட்பாளர் சங்கர்லால் வாணிக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இதனால் காங்கிரஸ் பிரதிநிதி இல்லாமல் ஐந்து அரசியல் கட்சிகள் 9 சுயேட்சை வேட்பாளர்கள் என்று 14 பேர் களத்தில் நின்றனர். இதில் யாரையோ ஒருவரை ஆதரிக்காமல் தங்கள் ஆதரவு வாக்காளர்களை நோட்டா விற்கு வாக்களிக்க காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. இதன் விளைவாக, நாட்டிலேயே நோட்டா வுக்கு அதிக பட்சமாக 2 லட்சத்து 18 ஆயிரத்தி 674 வாக்குகள் கிடைத்தது. இந்த நிலையில், அதிமுக அதைப் பின்பற்றுமா? என்று நாடு எதிர்பார்க்கிறது. நோட்டாவில் பதிவாகும் வாக்குகளை வைத்துத்தான். அதிமுக மீதான சந்தேகப் பார்வை, அதன் அரசியல் திசை வழிப் பயணம் என்ன என்பது தெரியவரும். மல்லை சத்யா மதிமுக துணைப்பொதுச்செயலாளர்
அனுமதியின்றி எருதாட்டம்: 5 பேர் மீது வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரி, ஜூலை 9- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்தில் உள்ள கந்திகுப்பம் அருகே சின்ன பனகமுட்லு பகுதியில் இரு நாட்கள் முன்பு எருதாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி
மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஜூலை 9- தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலியான சம்பவம் தொடர்பாக கால்நடை மருத்துவர், உதவியாளர் ஆகியோருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அவனிப்பூர் கால்நடை அரசு மருத்துவமனைக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்ட 82 ஆடுகளை அதன் உரிமையாளர் ராஜேஸ்வரி கொண்டு சென்றார். அந்த ஆடுகளை பரிசோதிக்காமலேயே கால்நடை மருத்துவர் மணிகண்டன் 82 ஆடுகளுக்கும் ஊசி போட்டுள்ளார். அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக 82 ஆடுகளும் இறந்தன. இதையடுத்து தவறான சிகிச்சை அளித்த மருத்து வர், அவரின் உதவியாளர் மீது நட வடிக்கை எடுத்து, இறந்த ஆடு களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி ஆடுகளின் உரிமையாளர் ராஜேஸ்வரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திண்டிவனம் கால்நடை உதவி இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் ஆடுகள் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப் பட்டு இறந்தது” என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், “மருத்துவர்கள், உதவியாளர்களின் தவறான சிகிச்சை யால் தான் ஆடுகள் இறந்தது” என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, விழுப்புரம் கால்நடை உதவி இயக்குநர், கால்நடை மரு. மணி கண்டன், உதவியாளர் பழனி, ஆடு களின் உரிமையாளர் ராஜேஷ்வரி ஆகி யோருக்கு நோட்டீஸ் அனுப்பி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விசா ரணை நடத்த வேண்டும். விசாரணை அடிப்படையில், உரிய இழப்பீடு வழங்குவது குறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கால்நடை மருத்துவர், உதவியாளர் ஆகியோர் மீது உதவி கால்நடை இயக்குநர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த நடவடிக்கை அனைத்தையும் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
அரசு போட்டித் தேர்வில் செய்தித்தாள் முக்கியத்துவம்: ஒசூரில் கருத்தரங்கம்
கிருஷ்ணகிரி, ஜூலை 9- ஓசூர் மக்கள் சங்கம் சார்பாக அரசு போட்டி தேர்வுகளில் செய்தித்தாள்களின் முக்கியத்துவம் குறித்து ஓசூர் மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் கருத்தரங்கம் நடத்தியது. சங்கத் தலைவர் எம்.பிரசாத் தலைமை தாங்கினார். மாநகர ஆணையர் சினேகா பேசும் போது, “இந்திய வருவாய் பணிகள் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் ஓசூர் எம்.கிருத்திக் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற எப்படி படித்தார்? என சொந்த அனுபவத்தின் மூலம் கருத்துரை வழங்கினார். மேலும் ஒன்றிய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஓசூர் சுவாதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளரும் ஊக்க பயிற்சியாளருமான எம்.பி.சரவணன் பேசுகையில்,“அரசு பணிகள் போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு செய்தித்தாள்கள் படிப்பது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, செய்தித் தாள்களை ஏன்? படிக்க வேண்டும். அதில் வரும் செய்திகள் போட்டித் தேர்வுகளுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது. செய்தித்தாள்களின் ஆளுமை குறித்து விளக்கமாக கூறினார். மக்கள் சங்கத்தின் கல்வி குழு சார்பில் அரசு பணிகள் போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு சுவாதி பள்ளியில் கல்வி குழு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படும் என பணிவு ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் நரசிம்மலு தெரிவித்தார்.
புதுவையில் அரசுப் பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்
புதுச்சேரி, ஜூலை 9- புதுச்சேரியில் அரசுப்பள்ளி கள் இயங்கும் நேரம் மாற்றிய மைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி பள்ளி முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3.45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவெளி விடப்படுகிறது. அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4.20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை வருகிற 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைக்காய்ச்சல் : சுகாதாரத்துறை எச்சரிக்கை
புதுச்சேரி, ஜூலை.9- மூளைக் காய்ச்சல் நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தி யுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல வழித்துறை இயக்குநர் மரு. ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அண்மைக் காலங்களில் வெளிவந்த செய்தித்தாள்களில் கேரளாவில் நான்கு பேர் மூளைக் காய்ச்சல் நோயால் உயிரிழந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூளைக்காய்ச்சலுக்கான அமீபா, நுண்ணுயிர் கிருமி வகையை சேர்ந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து வலி, மன குழப்பம், பிரமைகள் போன்ற சிந்தனைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த நோயிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேங்கி நிற்கும், மாசுபட்ட, அழுக்கு நீரை குளிக்க மற்றும் நீச்சலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது. தேங்கி நிற்கும் நீர் நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதார மாக உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும். பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்பு களுக்கு சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரின் பயன்படுத்தவேண்டும் மற்றும் இந்த சூழலில் உயிரினம் உயிர் வாழ முடியாது என்பதால், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 2 பிபிஎம் க்கு மேல் குளோரின் அளவை சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்துவது உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியூர் பயணம் மற்றும் சந்தேகத்திற்குரிய நோயின் அறிகுறிகள் கண்டறிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பெரியார் கலைக் கல்லூரியில் நாளை 3வதுகட்ட கலந்தாய்வு துவக்கம்
கடலூர், ஜூலை 9- கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஜூன் 10 முதல் 15 வரை முதல் கட்ட கலந்தாய்வு, அதனை தொடர்ந்து, ஜூன் 24 முதல் 28 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது. இன்னும் சில பாடப் பிரிவுகளில் காலி இடங்கள் மற்றும் 20 விழுக்காடு கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு இருப்பதால் வருகின்ற இம் மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 11 அன்று கட்ட அப் 400 மதிப்பெண்கள் இருந்து 250 வரை நடை பெறும். (தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத்திற்கு 100 இருந்து 60 மதிப்பெண் வரை) ஜூலை 12 அன்று கட்ட அப் 249 மதிப்பெண்களில் இருந்து 140 மதிப்பெண்கள் வரை ( தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத்திற்கு 59 முதல் 35 மதிப்பெண் வரை) நடைபெறும். இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றுகளையும் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் முனைவர் ரா. ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.