districts

img

அரக்கோணம் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்

ராணிப்பேட்டை, நவ.2– ராணிப்பேட்டை மாவட்டம். அரக்கோணம் நகராட்சியில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.1) நகரமன்றத் லட்சுமி பாரி தலைமையில் நடை பெற்றது. இதில் துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், ஆணையர் கன்னியப்பன் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்வி களுக்கு பதிலளித்து பேசி னர்.  அப்போது, கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர் களுக்கிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆணையர், இந்த நகர மன்றத்தில் திமுக உறுப்பி னர்கள் பலம் அதிகம் இருந்தாலும் கட்சி பாகுபாடு எதுவும். கிடையாது. அனைத்து வார்டுகளுக்கும் முறையாக நிதி ஒதுக்கப்படுகிறது. வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வார்டிலும் மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்மானங்கள் நிறை வேற்றப்படுகிறது.  எனவே, இந்த கூட்டத்தில் களங்கம் விளை விக்கும் வகையில் யார் பேசி னாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் வெளி யேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்தார். மேலும்.  கவுன்சில்கள் உங்கள் வார்டுகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் மட்டுமே பேச வேண்டும். மேலும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என ஆணையாளர் கன்னி யப்பன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கூட்டம் அமைதியாக நடந்தது.