சென்னை, செப். 5- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத் திற்குட்பட்ட 4ஆவது வார்டில் தார்சாலைகள், ஐஎல்பி சாலைகள் அமைக் கும் பணிகளை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் துவக்கி வைத்தார். ஆதிதிராவிடர் காலனி 16ஆவது தெருவில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டிலும், ஜெய்ஹிந்த் நகர் பிரதான சாலை ரூ.19 லட்ச மதிப்பீட்டிலும், ஜோதி நகர் 10ஆவது தெரு ரூ. 20 லட்ச மதிப்பீட்டிலும், கண்ணியலால் லேஅவுட் நேதாஜி நகர் 2ஆவது பிர தான சாலை, 3ஆவது குறுக்கு தெரு, 4ஆவது குறுக்கு தெரு, பிருந்தாவன் நகர் பிரதான சாலை ஆகிய வற்றில் தார் சாலை அமைக் கப்படுகின்றன. மாகாளியம்மன் 3ஆவது குறுக்கு தெரு, எர்ணீஸ் வரர் நகர் 4ஆவது குறுக்குத் தெரு, பிருந்தாவன் நகர் பகுதி 2 தெருக்கள் ஆகிய வற்றில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி 1 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப் பட்டது. இந்த பணிகளை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வியாழனன்று (செப். 5) துவக்கி வைத்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிக்குழு உறுப்பினர் கே.வெங்கடையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.