districts

img

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் பேரவை

பத்திரிகையாளர்களின் நலனுக்காக தமிழக அரசு அளித்த தேர்தல்  வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என  தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (டியூெஜ) சென்னை மாவட்ட பேரவையில் வலியுறுத்தப்பட்டது. வியாழனன்று (டிச.29) சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற பேரவையில் மாவட்டத்தலைவர் எம்.ஜி.ரவிச்சந்திரஹாசன் தலைமை தாங்கினார்.மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன், செயலாளர் போளூர் சுரேஷ், பொருளாளர் வந்தவாசி ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் சேம்பியன் முத்து, தலைமை நிலைய செயலாளர் வேளாங்கன், திருவள்ளுர் மாவட்டத்தலைவர் முருகக்கனி, சென்னை மாவட்டச்செயலாளர் ம.மீ.ஜாபர், பொருளாளர் ரத்தினபாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.