districts

img

தீக்கிரையான குடிசை

திருவள்ளூர், நவ.21- பூந்தமல்லி சர்ச் தெருவில் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் குடிசை வீட்டில் வசித்து வருபவர் சாம்சன். இவரது வீட்டில் மேற்கூரை வெள்ளியன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து  அக்கம் பக்கத்தினர்  தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, பக்கத்தில் இருந்த மற்றொரு குடிசைக்கும் தீ பரவியது. இதையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 குடிசை வீடுகளில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.