districts

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

சென்னை, செப். 15- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கவனமாக  இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி செய்திக்குறிப்பு வருமாறு; சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மாநகராட்சியின் சார்பில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாட்களில் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை மாநகராட்சி யில் 16 சமுதாய நல மையங்களில் தொண்டை தடவல் மாதிரிகள் சேகரிக்கப்படு கின்றன.  கோவிட் தொற்று அறிகுறிகள் உள்ள வர்கள் அருகிலுள்ள மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமையில் உள்ளபோது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டில் உள்ள பிற நபர்களும் முகக்கவசம் அணிந்து இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தொற்று பாதித்த நபர்கள் வீட்டுத் தனி மையில் (அ) மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்வதா என்பதை மருத்து வர்கள் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். பெரு நகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் இதுவரை 1 கோடியே பத்து லட்சத்து 34 ஆயிரத்தி 921 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.   சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் கடந்த ஒரு சில மாதங்க ளாக  கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது.  புதன்கிழமை முதல்  தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனவே, பண்டிகை கால விடுமுறைகள் நெருங்கி வரும் வேளையில் கோவிட் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவ சம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும்,  கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்படு கிறார்கள்.  மேலும் சளி, காய்ச்சல் இருப்பின் சுயசிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவர்களை அணுகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;