சென்னை,டிச.8- வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து தேவை யான முன்எச்சரிக்கை நடவடிக் கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் வியாழனன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. மெரினா, பட்டினப் பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்பட அனைத்து இடங்களிலும் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. பல அடி உயரத்துக்கு கடுமையான சீற்றத்துடன் கடல் காணப்பட்டது. இதை தொடர்ந்து மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. புயலுக்கு பயந்து மெரினா கடற்கரைக்கு மக்கள் அதிகமாக செல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே கடலொர பகுதிகளில் காணப்பட்ட னர். அவர்களையும் போலீசார் வெளியேறுமாறு எச்சரித்ததை காண முடிந்தது. புயலால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசு கிறது. படகுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு விடக்கூடும் என்பதால் கயிற்றில் கட்டி வைத்திருந்தனர். சென்னை மாநகர் முழுவதுமே குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவியது. லேசான சாரல் மழையும் பெய்து கொண்டே இருக்கிறது. பழவேற்காடு பகுதி யில் கடல் அலை பலத்த சீற்றத்து டன் வீசுகிறது. புயல் காரணமாக பழவேற்காட்டை சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள், மீன் பிடி உபகரணங் களை அவர்கள் பத்திரமாக கடல் கரையில் கட்டி வைத்து உள்ளனர். மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் (ரேடி யேட்டர்) கொதிகலனின் வெப்பத்தை தணிக்க, 1கி.மீ., தொலைவில் கடலில் இருந்து எடுக்கப்படும், கடல் நீர் குழாய்கள் புயல், கடல் சீற்றத்தால் தேச மடைந்து விடாத வண்ணம் அப்பகுதியை அணுமின் நிலைய நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பேரிடர் மீட்புப்பணிகள் குறித்து அணுமின் நிலைய பாது காப்பு ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் உள்ளனர். புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 15 மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மீட்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
அவசர உதவிக்கு அழைக்க 1913 |
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, புகார்களை தெரிவிக்க 1913 என் உதவி எண்ணில் அழைக்கலாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகாமையில் நிற்பதை தவிர்க்க வேண்டும், புயல் எச்சரிக்கையால் பொதுமக்கள், மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தியது |
எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை
புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.