districts

img

அணுமின் நிலையத்தில் ஆபத்தான பணிகளில் ஒப்பந்த ஊழியர்கள்!

செங்கல்பட்டு, ஏப். 21- செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம் (மேப்ஸ்)  1 மற்றும் 2, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்  (ஐசிசிஏஆர்)  பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி, எப்ஆர்எப்சிசி, பிஆர்சி போன்ற அணுசக்தி நிறு வனங்கள் இயங்கி வருகின்றன.  இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்ற னர். சென்னை அணுமின் நிலையம் 1970 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள்  துவங்கப்பட்டு 1983 ஆம் ஆண்டு முதல்  அணு உலை அப்பொதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியால்  நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது இந்த அணு உலையில் 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.  தற்போது தொழில் நுட்ப பிரச்சனை  காரணமாக உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது.  சென்னை அணு மின் நிலையம் இரண்டாவது அணு உலை ஆனது 1985 ஆம் ஆண்டு அப்பொழுதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது இந்த அணு உலை 220 மெகாவாட் மின் உற்பத்திதிறன் கொண்டது. இந்த இரண்டு ஆலைகளும் இயற்கை யுரோ னியம் என்ற அணுக்கருவை எரிபொரு ளாக பயன்படுத்துவதாகும். 

இந்திராகாந்தி மையத்தில்1500பேர் நிரந்த தொழிலாளர்களும், 1500க்கும்  மேற்பட்டவர்கள் ஒப்பந்த தொழி லாளர்களாகவும்,  பணியில் உள்ளனர்.  பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் சுமார் 700 தொழிலாளர்கள் நிரந்தர மாகவும்,  ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் ஒப்பந்த தொழிலாளர்க ளாக உள்ளனர். பாவினியில்  சுமார் 400 பேர் நிரந்தர  தொழிலாளர்களாகவும், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் உள்ள னர். இதே போன்று ஜிஎஸ்ஓ என்னும் பொதுப் பணிகளில் 400 பேர் நிரந்தர தொழிலாளர்களாகவும்,  சுமார் ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த ஊழியர்களாகவும் பணி செய்து வருகின்றனர்.  கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் பணி  செய்திடும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஒப்பந்த ஊழியர்களில் 4500 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர்  நிரந்தரப் பணி களில் ஒப்பந்த ஊழியர்களாக பணி யாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த  20 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டப்பணி, துப்புரவு பணி  உள்ளிட்ட ஹவுஸ் கீப்பிங் பணியில் பணி செய்து வருகின்றனர்.  இதற்கு முன்னாள் இப்பணிகளை நிரந்தர பணியாளர்கள் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பாலாற்றில் இருந்து  கொண்டு வரும் தண்ணீரை சுத்தப்படுத்தி நகரியம் முழுவதும் அனுப்பும் பணியில் 100 க்கும் மேற்பட்ட வர்கள்  கடந்த 20 வருடங்களுக்கு மேலாக  பணி செய்து வருகின்றனர். மேலும் நகரியத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி நிறுவனம் மருத்து வமனையில் 100 க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள்  தொடர் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த பணியிடங்களும் தற்போது ஒப்பந்த முறையில் மாற்றப் பட்டுள்ளது. குறிப்பாக இந்த பணியிடங்கள் அனைத்தும் நிரந்தரப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அந்த பணியிடங்களை  ஒப்பந்த முறை யாக  மாற்றப்பட்டு  ஒப்பந்த முறையி லேயே பணியாளர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கதிர்வீச்சு  ஆய்வகத்தில் ஆல்பா, பீட்டா, காமா ஆகியவற்றின்  பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுவரும் பிஎஸ்சி,  எம் எஸ் சி படித்த ஆய்வாளர்கள் கூட தற்போது ஒப்பந்த முறையில் எடுப்பது தொழி லாளர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  அணுவை பிளந்து அதில் இருந்து வரும் வெப்பத்தில் கடல் நீரை  ஆவியாக்கி அதில் இருந்து மின்சாரம்  தயாரிக்கும்  பிரிவில் கூட  சுமார் 100  தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகின்றது.  இவர்கள் அனைவரும் பட்டயம், பட்டப்படிப்பு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    இதில் இருந்து ஒன்றிய அரசு அணு கதிர்வீச்சு வேலை களிலும் கூட ஒப்பந்த ஊழியர்களை வைத்தே பணி செய்வதாக கூறப்படு கிறது.   மேப்ஸ் நிறுவனத்தில் 1977ம் ஆண்டு பணியில் 1600 பேர் இருந்த நிலை யில் தற்போது இதில் 700 பேர் மட்டுமே நிரந்த பணியாளராக உள்ளனர்.  இதில் சுமார் 600 ஒப்பந்த தொழிலா ளர்கள் பணி செய்து வருகின்றனர். 

இங்கு கல்பாக்கம் இண்டஸ்டிரியல் கோ ஆப்ரட்டிவ்  சர்வீஸ் சொசைட்டி  செயல்பட்டு வருகின்றது. 180  ஊழியர்களை  கொண்டு தொடங்கப் பட்ட இந்த  சொசைட்டி தற்போது  22 தொழிலாளர்களாக சுருங்கி யுள்ளது. சுற்றுச்சூழல் குறித்து கல்பாக்கம் அணுமின் நிலையம் சுற்று வட்டார 32 கி.மீ. தூரத்தில் கதிர்வீச்சு  குறித்து வாரம் ஒரு முறை ஆய்வுகள்  நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அப்பகுதியில் ஆட்டிறைச்சி கடையில் இருந்த ஆட்டின் நுரையீரல் மற்றும் அங்கு விளையும் காய்கறிகள், கிணற்று நீர், கடல் நீர், காற்று ஆகிய வற்றில் கதிர்வீச்சு உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் கூட ஒப்பந்த ஊழியர்கள்தான் அமர்த்தப்பட்டுள்ளனர்.  1972ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த ஆய்வு நடைபெற்று வரு கி்றது. குறிப்பாக அணுமின் நிலையம்  தொடங்குவதற்கு முன் எப்படி கதிர்வீச்சு இருந்தது. தற்போது எப்படி  உள்ளது என்பதை ஆய்வு செய்வது  இவர்கள் பணியாகும். இங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் தோட்டப்பணி  ரூ.473. தூய்மைப் பணிக்கு 494, அன் ஸ்கில்டு தொழிலாளர்களுக்கு ரூ.664, செமி ஸ்கில்டு தொழி லாளர்களுக்கு ரூ.680, ஸ்கில்டு  தொழிலாளர்களுக்கு ரூ.795,  ஹைல்டி ஸ்கில்டு தொழிலாளர்க ளுக்கு ரூபாய் 820,  வழங்க வேண்டும்,  அதாவது 30 நாட்களுக்கு குறைந்த பட்ச சட்ட  ஊதியம்  ரூபாய் 18 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால்  ஒப்பந்ததாரர்கள் இதை முழுவதுமாக வழங்குவதில்லை. மாறாக செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் செயல்பட்டு வரும்  சிட்டி யூனியன் வங்கியில் வங்கி கணக்கு துவங்கி ஊழியர்களிடம் இருந்து ஏடிஎம் கார்டை வாங்கி வைத்துக் கொண்டு  ஊழியர்களுக்கு வரும் ஊதி யத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடுங்கிக்கொண்டு ரூ.18 ஆயிரத்திற்கு பதிலாக ரூ. 7500 மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களை மிரட்டுவது, வேலையை விட்டு நீக்குவது என பல்வேறு வடிவங்களில் ஒப்பந்த  ஊழியர்கள்  பழிவாங்கப்படுகிறார்கள்.  ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே பணி என்ற நிலை உள்ளது. இதே போன்று வருங்கால வைப்பு நிதி,இஎஸ்ஐ உள்ளிட்டவற்றுக்கு பிடிக்கப்படும் பணத்தையும் ஒப்பந்ததாரர்கள் முறையாக கட்டாமல் ஒப்பந்த ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும்  வேலையை செய்து வருகின்றனர். இதை எதிர்த்து கேட்டால் வேலை இல்லை என்ற நிலைதான் நீடிக்கின்றது. வேலையில்லாத பட்டதாரிகள் கூட தற்போது வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையில் தற்போது பணி செய்து வருகின்றனர். கேள்விக்குறியாகும் குறைந்தபட்ச கூலி ஒப்பந்த ஊழியர்களுக்கு என அரசின் விதி முறையில் 3 சட்ட கூலி முறை உள்ளது.

 ஒன்றிய அரசின் கூலி,  மாநில அரசின் கூலி, மாவட்ட ஆட்சி யரின் கூலி இவற்றில் எது அதிகமோ அதை நிர்வாகம் வழங்க வேண்டும் என குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி  சிஐடியு சார்பில் தொடர்ந்து வலி யுறுத்தி போராடி வருகின்றனர். தற்போது சிஐடியு சங்கம் எங்கு உள்ளதோ அங்கு மட்டுமே இந்த கூலி  வழங்கப்பட்டு வருகிறது.  ஒப்பந்த ஊழியர்கள் என்றால் உரிமைகளற்ற  அடிமைகளாகவும், சட்டப்படி சம்பளம் கேட்டால் வேலை நீக்கம் செய்யப்படுவதும்,  போனஸ், பிஎப், இஎஸ்ஐ  என எது  கேட்டாலும் வேலை நீக்கம் தான் பதிலாக இருக்கும். வழங்கும் அரை குறை சம்பளத்தில் லஞ்சம் கேட்கும் அவலம் வேறு.  லஞ்சம் கொடுக்க மறுத்தால்  வேலை நீக்கம் என ஒப்பந்த ஊழியர்க ளின் அவலப் பட்டியல் நீளும். செல்லையா அன் கோ  நிறுவ னத்தில் 2021ல்  6, 2023 ஆம் ஆண்டு 4 ஒப்பந்த பம்ப் ஆபரேட்டர்கள், மேக்வான் சிவில் காண்ட்ராக்டர்  நிறுவனத்தில்  2021ல் 2 ஒப்பந்த பம்ப் ஆபரேட்டர்கள், 2021ல்  வைஷ்ணவி புட்ஸ் ஒப்பந்த  நிறுவனத்தில்   என்சிசி மேப்ஸ் கெஸ்ட் ஹவுசில் 8 பெண்  ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட வர்களிடம்  மட்டும் இரண்டு வருடத் தில்   ஒப்பந்த நிறுவனங்கள் ஊழியர்க ளிடமிருந்து  பெற்றுக்கொண்ட லஞ்சப்  பணம் மட்டும் சுமார் ரூ25 லட்சத்துக்கும்  மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதே போன்று நேஷனல் ரோட் லைன்ஸ் என்ற ஒப்பந்த நிறுவனத்தில் சங்கம் துவங்கியதற்காக 3 ஒப்பந்த பேருந்து ஓட்டுநர்கள்  வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த கொடுமைகளுக்கு தீர்வுகாண வேண்டுமென்று தொழிலாளர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

சுற்றுப்புற இளைஞர்களுக்கு  நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குக -பகத்சிங்தாஸ்

 சிஐடியு மாவட்டச் செயலாளர் க.பகத்சிங்தாஸ் கூறுகையில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பொதுசேவை நிறுவனம் (ஜிஎஸ்ஓ) ,  சென்னை அணுமின் நிலையம் (மேப்ஸ்)  ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும்  ஒப்பந்த ஊழியர்களுக்கு அடிப் படை ஊதியமாக தோட்டப் பணிக்கு ரூ.473. தூய்மைப் பணிக்கு ரூ.494, அன் ஸ்கில்டு தொழிலாளர்களுக்கு ரூ. 664, செமி ஸ்கில்டு தொழி லாளர்களுக்கு ரூ.680, ஸ்கில்டு  தொழிலாளர்களுக்கு ரூ.795,  ஹைலி ஸ்கில்டு தொழிலாளர்க ளுக்கு ரூ.820,  வழங்க வேண்டும்,  அதாவது 30 நாட்களுக்கு குறைந்தபட்ச சட்ட  ஊதியம்  ரூ. 18  ஆயிரம் வழங்க வேண்டும். பம்ப் ஆப்ரேட்டர், பிளான்ட் ஆபரேட்டர், ஓட்டுநர், செவிலியர்   போன்ற வேலைகளுக்கு  சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்,  சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும்  சம்பளத்துடன் வேலை வழங்கிட வேண்டும்,  

நிரந்தர வேலைகளில்  ஒப்பந்த முறையை ரத்து செய்து  சுற்றுப்புற இளைஞர்களுக்கு  நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டும். தற்காலிக ஒப்பந்த ஊழியர்க ளுக்கு  சட்ட ஊதியம், ஊதிய பட்டியல்  போனஸ், தேசிய விடுப்பு  ஊதியம், விபத்து காப்பீடு, மருத்துவ காப்பீடு  விடுப்பு வசதி,   பேருந்து வசதி, கதிரியக்க பாதுகாப்பு வசதிகளை செய்திட  வேண்டும், கிங்காஸ் தொழி லாளர்களை  நிரந்தரப்படுத்த வேண்டும், 25 விழுக்காடு  சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும்,  பணிக்கொடை தொகையை வட்டியயுடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட  இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நல அலவலகத்தில் பல வழக்குகளை தொடுத்தள்ளோம்.  இதே கோரிக்கைகளை வலி யுறுத்தி சுற்று வட்டார கிராம சபைகளில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர். இக்கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு தொடர்  போராட்டங்களை நடத்தி வருகிறது  எனறும் அவர் கூறினார். மேலும் ஒப்பந்த தொழிலாளர்க ளிடம்  லஞ்சம், கமிஷன் பெறுவது,   ஊதியத்தை குறைத்து கொடுப்பது,  காலதாமதமாக கொடுப்பது, பிஎப்  பிடிக்க மறுப்பது, பிடித்த பணத்தை  கட்டாமல் இருப்பது போன்ற குற்றங்களை செய்யும் ஒப்பந்த  நிறுவனங்கள்  மீது  நிர்வாகம்  உடனடியாக  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.