districts

img

ஐசிஎப்-ல் மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி

சென்னை, டிச. 28 - ஐசிஎப்-ல் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி ஒரு வர் பலியானார். ஐசிஎப்-ல் கான்டேக்ட் என்ற ஒப்பந்த நிறுவனம் பல பணிகளை செய்து வரு கிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் பரமேஷ்  (வயது 37) என்ற ஒப்பந்த தொழிலாளி வெள்ளியன்று (டிச.27) கமிஷனிங் ஷெட் அருகில் ரயில் பெட்டி கூரை மீது பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி யதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஐசிஎப் கே-7 காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து நிகழ்ந்ததும் ஐசிஎப் யுனை டெட் கான்டராக்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) பொதுச் செயலாளர் என்.வி.கிருஷ்ணன் ராவ் மற்றும் நிர்வாகிகள் குடும்பத்திற்கு தேவையான உதவி களை செய்ததோடு, குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடு வழங்க கோரினர். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நாட்டின் மிகப்பெரிய ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தொழி லாளி உயிரிழக்கும் வகை யிலான பாதுகாப்பு குறை பாடுகள் உள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இதில், சென்னை மண்டல தொழிற்சாலை ஆய்வாளர் தலையிட்டு, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐசிஎப் தொழிற்சாலை யில் 2700 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளது. ரயில்வே வாரி யம் ஆண்டுதோறும் ரயில் பெட்டி உற்பத்தி எண்ணி க்கையை மட்டும் உயர்த்தி கொண்டே செல்கிறது. இதனால் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு கூடுதல் உற்பத்தியை செய்கிறது. ஐசிஎப் தொழிற்சாலையில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஊழியர்களில் 3ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு பாது காப்பான வேலை வழங்கப்படுவதில்லை. மேலும், கூடுதல் வேலை வாங்கப்படுகின்றனர். சட்ட ரீதியான ஊதியமும் உரிய தேதியில் வழங்கப் படுதில்லை. சட்ட ரீதி யான உரிமைகள் அம லாக்குவதில்லை. ஒப்பந்த நிறுவனங்களை சட்ட ரீதியாக ஒழுங்கு படுத்துவதில் ஐசிஎப் நிர்வாகம் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் உள்ளது. இதுபோன்ற கோர மரணம் இனி நடக்காமல் இருக்க உரிய பாதுகாப்பு வழி முறைகள் உருவாக்கி, கண்காணிக்க வேண்டும்” என்றார்.