விழுப்புரம், நவ. 4- விழுப்புரத்தில் 3ஆவது நாளாக தொடர் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மிதமாக பெய்து வரு கிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. விழுப் புரம் புதிய பேருந்து நிலையம், கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை, சென்னை - திருச்சி நெடுஞ்சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை, பாண்டியன் நகர், வழுத ரெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சாலாமேடு, மணிநகர், கம்பன் நகர், சர்வே நகர், பிரிய தர்ஷினி நகர், மஞ்சு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விட்டன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளன. மேலும் தரைக்கடை, தள்ளு வண்டி, சாலையோர வியாபாரி களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே மாவட்ட நிர்வாகம் முறையாக மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும், தூற்றுப் போன கால்வய்களை சீரமைக்க வேண்டும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.