districts

வாரிசுகளுக்கு வேலை கோரி நெய்வேலியில் தொடர் முழக்கப் போராட்டம்

கடலூர், அக். 6- நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், பொறியாளர் மற்றும் அதிகாரிகள் தொழிலாளர்கள் என தனித்தனியாக உள்ள அறக்கட்டளையை ஒன்றாக இணைக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களின் போனஸ், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், காலி பணியிடங்களில் வாரிசு, நிலம், வீடு கொடுத்தவர்கள், பணியின்போது மரணமடைந்தவர்கள், வாரிசு,  அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் சிஐடியு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் எம்.பி. பழனிவேல் தலைமை தாங்கினார்.  சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். திருஅரசு, தலைவர் டி. ஜெயராமன், பொருளாளர் எம்.சீனிவாசன், சிபிஎம் நகர செயலாளர் ஆர். பாலமுருகன், சிஐடியு நிர்வாகிகள் வி.குமார், எஸ்.முருகன், எம்.சம்பத், காண்ட்ராக்ட் சொசைட்டி சங்க தலைவர் எஸ். பழனிவேல், பொதுச்செயலாளர் டி. அமிர்தலிங்கம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.