districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் தலையீடு: கடப்பேரி பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் கட்டிடம்

சென்னை, ஜன. 31 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் தலை யீட்டையடுத்து, கடப்பேரி ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி திங்களன்று (ஜன.31) தொடங்கியது. தாம்பரம் மாநக ராட்சி, கடப்பேரி திரு வள்ளுவர்புரத்தில் அரசு ஆதிதிராவிடர் நல நடு நிலைப் பள்ளி உள்ளது. 4 சென்ட் நிலத்தில் 3 வகுப்பறைகளுடன் ஒரு கட்டிடமும், 10 சென்ட் நிலத்தில் 3 வகுப்பறை களு டன் மற்றொரு கட்டிடமும் என ஒரே தெருவில் எதிரெதிரே உள்ள இரண்டு கட்டிடங்களில் பள்ளி செயல்படுகிறது. 2021ம் ஆண்டிலிருந்து ஆங்கில வழி கல்வியும் கற்பிக்கப்படுகிறது. கடப்பேரி, வெட்டியான் குன்று, பெரியார் நகர், புலிகொரடு கன்னட பாளையம், திருநீர்மலை சாலை, திருவள்ளுவர் நகர், அற்புதம் நகர், கே.கே.பாளையம், கஸ்தூரிபாய் நகர் பகுதிகளை சேர்ந்த 140 மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளி யில் நிலவும் இட நெருக் கடி, விளையாட்டு மைதா னத்திற்கு போதிய இடவசதியின்மை போன்ற வற்றால் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. கடப்பேரி மற்றும் அதனை சுற்றி 3 கி.மீ. சுற்றள வில் ஒரு அரசு பள்ளி கூட இல்லை. ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையும் சற்று அதிகரித்தது. எனவே, பள்ளியை நிலை உயர்த்தி, கூடுதல் கட்டி டம் கட்ட வேண்டும். தற்போது உள்ள இடம் போதுமானதாக இல்லை. எனவே, ராஜகோபால் நகரில், ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தி வந்த களம் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட (சர்வே எண் 110) 98 சென்ட் நிலம் உள்ளது. அங்கு பள்ளியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரியது. இதனை வலியுறுத்தி சுவரொட்டி இயக்கம், கையெழுத்து இயக்கம், மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலு வலர், ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு வட்டாட்சியர், தாம்பரம் மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.

இந்த தொடர் நட வடிக்கைகளின் விளைவாக, திருபெரும்புதூர் நாடாளு மன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இதன்படி, ராஜ கோபால் நகரில் உள்ள 98சென்ட் நிலத்தில், புதிதாக 3 வகுப்பறையுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், இந்த கால்கோள் விழாவில் கலந்து கொண்டு, கட்டு மானப் பணியை தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமல கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், ஆணையர் டாக்டர் மா.இளங்கோவன், சிபிஎம் மூத்த தலைவர் ராஜன்மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.  கிருஷ்ணாவிடம் கேட்ட போது, “ஆதிதிராவிடர் நலப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக நிலை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். ஆதி திராவிடர் நலத்துறை வாயிலாக 1.50 கோடி ரூபாய், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மேலும் கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்” என்றார்.